புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள பாகூர் கன்னியக்கோவிலில் சாராயக்கடை அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணையில், கன்னியக்கோவில் இருக்கும் பச்சைவாழி அம்மன் கோவில் பகுதியில் இருளஞ்சந்தை புறாந்தொட்டியை சேர்ந்த ராணி 45 பெண் தனது 3 வயது ஆண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த பெண் முழு நேரமும் மது போதையில் இருந்து வந்ததை தொடர்ந்து, மகன் உணவுக்காக கையேந்தி வந்துள்ளான். இது பற்ற தகவல் அறிந்த போலீசார், அந்த சிறுவனை மீட்டு, குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுவனின் தாய் நேற்று முன்தைய தினத்தில் கன்னியக்கோவில் உள்ள சாராயக்கடை அருகே உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார் என காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதன் பின்னர் அந்த பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.