fbpx

#புதுச்சேரி :மது போதைக்கு அடிமையான தாய்.. சாக்கடையில் அழுகிய நிலையில் கண்டெடுத்த உடல்..! 

புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள பாகூர் கன்னியக்கோவிலில் சாராயக்கடை அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில், கன்னியக்கோவில் இருக்கும் பச்சைவாழி அம்மன் கோவில் பகுதியில் இருளஞ்சந்தை புறாந்தொட்டியை சேர்ந்த ராணி 45 பெண் தனது 3 வயது ஆண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த பெண் முழு நேரமும் மது போதையில் இருந்து வந்ததை தொடர்ந்து, மகன் உணவுக்காக கையேந்தி வந்துள்ளான். இது பற்ற தகவல் அறிந்த போலீசார், அந்த சிறுவனை மீட்டு, குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுவனின் தாய் நேற்று முன்தைய தினத்தில் கன்னியக்கோவில் உள்ள சாராயக்கடை அருகே உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார் என காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதன் பின்னர் அந்த பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

#கேரளா: பெற்ற மகளிடம் தவறாக நடந்து கொண்ட தந்தை..107 வருடம் சிறைத் தண்டனை அளித்த நீதிமன்றம்..!

Tue Nov 29 , 2022
கேரள மாநில பகுதியில் உள்ள கும்பழா என்ற இடத்தில் 45 வயதான ஒருவர் தனது 14 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி மனவளர்ச்சி குன்றி இருக்கும் நிலையில் அதே பகுதியே சேர்ந்த பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார்.  சிறுமியின் தாய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது கணவனை விவாகரத்து செய்து விட்டு பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் சிறுமி […]

You May Like