தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்கு பணிகள் மற்றும் வாரியங்கள், நிறுவனங்களில் அடங்கிய பதவியில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழி தேர்வு வரும் 5ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல், 6ஆம் தேதி முற்பகலில் நடைபெறவுள்ளது.
தேர்வெழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால்டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.