fbpx

“ சாதி, மதம் மற்றும் அரசியலை கடந்து…” 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி ரஜினிகாந்த் போட்ட ட்வீட்..

நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.. இதை விமரிசையாக கொண்டாடும் விதமாக நாடு முழுக்க ஆக., 13 முதல் 15 தேதி வரை ஒவ்வொருவரின் வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்த தங்களின் வீடுகளில் கொடியேற்றி உள்ளனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் வீட்டு முன்பு தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த் “ இது இந்தியாவின் 75-வது சுதந்திர தினம்.. இதை கௌரவிக்கும் விதமாகவும், நம் ஒற்றுமையை காட்டும் விதமாகவும்… இந்த சுதந்திரத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்கள், தலைவர்கள், தியாகிகளுக்கு பெருமையுடன் வீர வணக்கம் செலுத்துவோம்.. சாதி, மதம் மற்றும் அரசியலை கடந்து.. தேசியக்கொடி ஏற்றுவோம்.. ஒவ்வொரு வீட்டிலும் கொடிக்கம்பம் அமைத்து ஆகஸ்ட் 15-ல் தேசிய கொடியை ஏற்றுவோம்.. இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடுவோம்.. ”என்று குறிப்பிட்டுள்ளார்.. மேலும் நான் பெருமைமிகு இந்தியன் என்ற ஹேஷ்டாகையும் பதிவிட்டுள்ளார்..

Maha

Next Post

மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது; காலனி வீசியதால் பரபரப்பு...!

Sat Aug 13 , 2022
நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜ்ஜவுரி மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர் லட்சுமணன் உட்பட நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்து லட்சுமணனின் உடல் ஜம்மு-காஷ்மீரில் இருக்கும் ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பிறகு, இன்று காலை 13-ஆம் தேதி தனி விமானம் மூலம் அவரது உடல் ஐதராபாத்துக்கு எடுத்து வரப்பட்டது. பிறகு அங்கிருந்து மதுரைக்கு விமானம் மூலம் […]
வடமாநிலங்களில் கடைபிடித்துவரும் வன்முறை அரசியலை தமிழ்நாட்டிலும் நுழைக்க பாஜக முயற்சி..! சீமான் கண்டனம்

You May Like