fbpx

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயங்கர விபத்து.! வெடித்து சிதறிய பாய்லர்.! தொழிலாளி பரிதாப பலி.!

சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து சிதறியதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்து தொடர்பாக மீட்பு பணிகள் மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலையில் இன்று 12 மணி அளவில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பாய்லர் வெடித்து சிதறியது. இந்த சத்தம் கேட்ட ஊழியர்களும் அப்பகுதியில் இருந்தவர்களும் அலறியடித்து ஓடினர்.

இந்த விபத்தில் பாய்லர் அருகே பணியாற்றிய பெருமாள் மற்றும் இரண்டு ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்ட சக தொழிலாளர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பெருமாள் அங்கு வைத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த இரண்டு தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Post

'பீல்டிங் செய்வதற்கு சோம்பேறித்தனம்’..!! பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய தண்டனை அறிவிப்பு..!!

Wed Dec 27 , 2023
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு புதிய தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு கூட தகுதிபெறாமல் படுதோல்வியடைந்தது பாகிஸ்தான் அணி. பொதுவாகவே பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங்கில் சொதப்புவது, கேட்ச்சுகளை நழுவ விடுவது, ரன் அவுட் வாய்ப்புகளை கோட்டை விடுவது என மோசமாக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் நிறைய கேட்ச் வாய்ப்புகள் மற்றும் […]

You May Like