fbpx

Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! 

கோவாவுக்கு சுற்றுலா சென்ற புதுச்சேரி மாணவன்..! அதிகளவு போதைப்பொருள் உட்கொண்டதால் மரணம்..!

சென்னை விமான நிலையத்தில் நேற்று ரூ. 28 கோடி மதிப்புடைய போதை பொருள் பறிமுதலான நிலையில், இன்று மேலும் ரூ‌.35 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை ஏர் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அந்த விமானத்தில் கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக வந்த ஒரு பயணி மீது, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த பயணியை நிறுத்தி விசாரித்தனர்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மேலும் அந்தப் பயணி கம்போடியா நாட்டிலிருந்து, மலேசியா வழியாக சென்னைக்கு வந்துள்ளதால், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் அதிகமானது. இதை அடுத்து அவருடைய உடைமைகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்திய போது, அவருடைய பைக்குள் மறைத்து வைத்திருந்த பார்சலை கண்டுபிடித்தனர்.

அந்தப் பார்சலை அதிகாரிகள் பிரித்துப் பார்த்த போது, அதனுள் 3.5 கிலோ கொகைன் போதைப் பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.35 கோடி என்று என்று கணக்கிடப்பட்டது. இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், அந்த பயணியை வெளியில் விடாமல், தனி அறையில் வைத்து விசாரித்தனர்.

இந்த போதை பொருளை யாரிடம் கொடுப்பதற்காக இந்தப் பயணி கடத்தி வந்தார்? இந்த கோகைன் போதைப் பொருள், சென்னைக்கு கடத்தி வரப்பட்ட காரணம் என்ன? இந்த போதை கடத்தல் பயணியின், பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.  இந்த கடத்தல் பயணி எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அவருடைய பெயர் போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர். ஆனால் இந்தப் பயணி சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. இப்போது விசாரணை நடந்து கொண்டு இருப்பதால், இதுகுறித்து மேலும் எந்த தகவலும் வெளியிட முடியாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

நேற்று ரூ. 28 கோடி மதிப்புடைய போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் ரூ‌.35 கோடி மதிப்புடைய போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் பெருகி வருவதாக குற்றசாட்டுகள் எழுந்து வரும் நிலையில் தொடர்சியாக விமான நிலையத்தில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

BJP | "மண்டைய மறைச்சீங்களே; கொண்டைய மறைச்சீங்களா.?" பாஜகவினரை கலாய்த்த திமுக தொண்டர்கள்.!!

Thu Apr 25 , 2024
BJP: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த பொது தேர்தல் வாக்குப்பதிவின் முதல் கட்டம் கடந்த 19ஆம் தேதி தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது . 102 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்த பொது தேர்தல் வாக்கெடுப்பில் பல கோடிக்கணக்கான வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை செலுத்தினர். […]

You May Like