தலைநகர் டெல்லியில் உள்ள பிரசாந்த் விகார் என்ற பகுதியில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவரும் இவரது காதலனும் சென்ற ஏழாம் தேதி காரில் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இவர்கள் காரில் நெருக்கமாக இருந்ததை கவனித்த ஒரு நபர் ஆபாச வீடியோவாக ஆதமை பதிவு செய்து வைத்திருக்கிறார்.
இவர்களுடைய காரை பின் தொடர்ந்து வந்த அந்த நபர் அந்த மாணவியின் காதலன் அந்த மாணவியை வீட்டு வாசலில் இறக்கி விட்டு சென்றவுடன், அந்த நபர் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று வழிமறித்திருக்கிறார்.
மேலும் அந்த கல்லூரி மாணவியிடம் தான் ஒரு காவல்துறை அதிகாரி என்றும், காதலனுடன் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன் என்றும், தன்னுடைய கைபேசியை காட்டி இருக்கிறார். மேலும் தன்னுடைய ஆசைக்கு இணங்க விட்டால் இதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த மாணவியை அந்த நபர் பலவந்தனாக தாக்கி படிக்கட்டு பகுதிகளில் வைத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பாதிப்புக்கு ஆளான அந்த பெண் தன்னுடைய காதலனிடம் தனக்கு நேர்ந்த கொடூரத்தை கூறி இருக்கிறார். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. அந்த பெண் வழங்கிய அடையாளத்தை கொண்டும் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், ரவி சோலங்கி என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.