fbpx

ஹோட்டலுக்குள் வைத்து 70 முறை வெட்டப்பட்ட திமுக பிரமுகர்..!! சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணம்..!!

மதுரை திமுக பிரமுகர் வி.கே.குருசாமி பெங்களூரில் 70 முறை அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மதுரையில் திமுக பிரமுகர்களில் ஒருவராக இருந்தவர் வி.கே.குருசாமி. இவர், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். விகே குருசாமிக்கும் அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜபாண்டியனுக்கும் 25 ஆண்டுகாலமாக பகை இருந்து வந்துள்ளது. இருதரப்புக்கும் இடையேயான மோதல்களில் இதுவரை மொத்தம் 15 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் முதல் வாரம் மதுரையில் இருந்து பெங்களூரு சென்றார் வி.கே.குருசாமி. பெங்களூரிலேயே வீடு வாங்கி செட்டில் ஆக வேண்டும் என திட்டமிட்டிருந்தார். இதற்காக பெங்களூரில் முகாமிட்ட நிலையில், ஹோட்டல் ஒன்றில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், விகே குருசாமியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த வி.கே.குருசாமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வி.கே.குருசாமி உயிரிழந்துவிட்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜபாண்டியன், வி.கே.குருசாமி இருவரும் கமுதி அருகே ஒரே ஊரை சேர்ந்தவர்கள். 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஊராட்சித் தேர்தலில் தொடங்கி பகை நீடித்து வந்தது. ராஜபாண்டியன் மகனை வி.கே.குருசாமி தரப்பு கடத்தி சென்று எரித்துக் கொலை செய்தது. இதனால், இந்த சண்டை உக்கிரமடைந்தது. இதற்கிடையே, வி.கே.குருசாமி கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தது, நாட்டு வெடிகுண்டு தயாரித்தது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த வி.கே.குருசாமி, பெங்களூருக்கு தப்பி தலைமறைவாக வாழ திட்டமிட்டிருந்த நிலையில், வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

Chella

Next Post

பிரக்யான் சிக்னலுக்காக அக்டோபர் 6 வரை காத்திருக்க வேண்டும்!… விஞ்ஞானிகள் தகவல்!

Sun Sep 24 , 2023
விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் சிக்னல் கிடைக்க அடுத்த சூரிய அஸ்தமனம் நிகழும் அக்டோபர் 6 ஆம் தேதி வரை காத்திருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து, கடந்த மாதம் 23-ந் தேதி […]

You May Like