fbpx

TNUSRB: எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச உடற்தகுதி தேர்விற்கான பயிற்சி வகுப்பு…!

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக இலவச உடற்தகுதி தேர்விற்கான பயிற்சி 09.10.2023 அன்று காலை 7 மணியளவில் மாவட்ட விளையாட்டு மைதானம் அப்பாவு நகர் பிடமனேரியில் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) சார்பு ஆய்வாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக உடல் திறன் தேர்விற்கு தயாராக வேண்டியுள்ளது. இவர்களுக்கு உதவும் வகையில் தருமபுரி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக இலவச உடற்தகுதி தேர்விற்கான பயிற்சி 09.10.2023 அன்று காலை 7.00 மணியளவில் தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானம் அப்பாவு நகர் பிடமனேரியில் தொடங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது, இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் 04342-296188 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது கீழ்க்கண்ட கூகுள் லிங்கில் https://rb.gy/i89rw தங்களது விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். தருமபுரி, மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

31 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பெண் சமூக ஆர்வலருக்கு அமைதிக்கான நோபல் பரிசு..!

Sat Oct 7 , 2023
31 ஆண்டுகளாக ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெண் சமூக ஆர்வலர் நர்ஜெஸ் மொஹம்மத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் இயற்பியல், வேதியியல், இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அமைதிக்கான் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நடப்பாண்டில் அமைதிக்கான நோபல் பரிசு ஈரானை சேர்ந்த பெண் சமூக ஆர்வலரான நர்ஜெஸ் மொஹம்மத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரை ஈரான் ஆட்சியாளர்கள் […]

You May Like