தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட முப்படையில் பணிபுரிந்து வெளிவந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோருக்கான சிறப்பு சூறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.07.2023 அன்று மாலை 04.00 மணியளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் குறைகள் ஏதேனுமிருப்பின் தங்களது குறைகளை கோரிக்கை மனுவாக இரட்டை பிரதிகளில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரில் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.