உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்த வாட்ச்மேன்யை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், வேலாண்டிபாளையம் காந்தி காலனியில் மேற்கு வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி. 49 வயதான இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் வாட்ச்மேன் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, அங்கு வேலை பார்த்து வந்த 47 வயது பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி, தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை, அந்த பெண்ணிற்கு தெரியாமல் ரகசியமாக அவருடைய செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும், இந்த வீடியோவை காட்டி தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று மிரட்டி வந்துள்ளார். இதனால், மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளான அவர், அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், ரங்கசாமி மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
பின்னர், சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் அந்த பெண்ணிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். வரவில்லை எனில் வீடியோவை வெளியிட்டிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண் மறுபடியும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக, சாய்பாபா காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ரங்கசாமியை மீண்டும் கைது செய்தனர். பின்பு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
Read more ; ’உஷாரய்யா உஷாரு’..!! பெற்றோர்களே இனி இந்த தவறை செய்தால் சிறைக்குத்தான் போகணும்..!!