சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வபிரகாசம் (27) இவரது மனைவி லாவண்யா (25) இந்த தம்பதிகள் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் மாங்காடு அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு சர்வேஸ்வரன்(3) என்ற மகனும் இருந்தார். இதற்கு நடுவே கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சர்வேஸ்வரன் தன்னுடைய தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த 8ம் தேதி செல்வபிரகாசம் விருகம்பாக்கத்தில் இருக்கின்ற லாவண்யா வீட்டிற்கு தன்னுடைய குழந்தையை பார்ப்பதற்காக சென்றார் அப்போது வீட்டில் லாவண்யா இல்லை என்று கூறப்படுகிறது. மகன் இறந்து விட்டதாக அவர்கள் தெரிவித்த தகவலை கேட்டு செல்வபிரகாசம் கதறி அழுதுள்ளார் இதனை தொடர்ந்து, குழந்தை இறந்த தகவலை தனக்கு தெரிவிக்காமல் குழந்தையை அடக்கம் செய்து விட்டதாக மாங்காடு காவல் நிலையத்தில் அவருக்கு கார் வழங்கினார். அதோடு வேறு ஒரு நபருடன் மனைவி பழகி வருவதால் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் குழந்தை சர்வேஸ்வரன் விளையாடும் போது கீழே விழுந்து தலையில் பலத்த காயம் உண்டாகி போரூரில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனைவி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், மறுபடியும் சில நாட்களுக்கு முன்னர் மயக்கம் அடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்து விட்டதும் தெரிந்திருக்கிறது. குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தான் குழந்தை சர்வேஸ்வரனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உயிரிழந்த குழந்தையின் உடலில் அதிக அளவில் காயங்கள் இருந்தது என்பது தெரிய வந்துள்ளது. ஆகவே லாவண்யா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் மணிகண்டன் உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கணவனை பிரிந்த லாவண்யா கெருகம்பாக்கத்தில் மணிகண்டன் வசிக்கும் வீட்டிற்கு கீழ் தளத்தில் வசித்து வந்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்த நிலையில் நாளடைவில் இருவருக்கும் இடையே இருந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.
இவர்களுடைய கள்ளக்காதலுக்கு குழந்தை சர்வேஸ்வரன் இடையூறாக இருந்ததால் வீட்டிற்கு வரும் போதெல்லாம் குழந்தை உடலில் சூடு வைப்பது, குண்டூசியால் குத்துவது மற்றும் ஆத்திரத்தில் சர்வேஸ்வரனின் உடலில் பல்வேறு இடங்களில் மணிகண்டன் கடித்து வைப்பது உள்ளிட்ட கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் தான் சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் மணிகண்டன் வீட்டிற்கு வந்தபோது சர்வேஸ்வரன் ஓடி வந்து இரு சக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தபோது ஆத்திரம் அடைந்த மணிகண்டன், குழந்தையை தூக்கி எறிந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதில் சிகிச்சை பலனின்றி குழந்தை சர்வேஸ்வரன் உயிரிழந்தார். என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து லாவண்யா மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.