fbpx

“போலீஸின் அட்ராஸிட்டி……”!பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் குழந்தை! காவல்துறை அதிகாரி மிதித்ததால் பரிதாபமாக பலி!

காவல்துறையினரால் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிடித் மாவட்டத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது . ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிடித் மாவட்டத்தில் ஒரு குற்றவாளியை தேடி காவல்துறையினர் ஒரு வீட்டை சோதனை செய்தபோது இந்த துக்க சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது. இறந்த குழந்தையின் தாத்தா பூஷன் பாண்டே ஒரு குற்ற வழக்கில் கைது செய்வதற்காக நான் பேய்லபிள் வாரன்ட்டுடன் காவல்துறையினர் அந்த வீட்டில் சோதனை நடத்தி இருக்கின்றனர். காவல்துறையினர் வருவதை கண்ட அந்த வீட்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் குழந்தையை தனியே விட்டுவிட்டு தப்பி சென்றதாக தெரிகிறது.

காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் புகுந்து குற்றவாளியை தேடி சோதனையில் ஈடுபட்டபோது உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை மிதித்ததாக தெரிகிறது. இச்சம்பவத்தில் பிறந்த நான்கு நாட்களேயான அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து அந்த குழந்தையின் தாய் நேகா தேவி தெரிவிக்கையில் “காவல்துறை எங்கள் வீட்டை சோதனை செய்யும் போது நாங்கள் அனைவரும் வெளியே சென்று விட்டோம். எனது குழந்தை வீட்டிலிருந்த ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தது. காவல்துறையினர் வீடு முழுவதும் சோதனை செய்தனர். அவர்கள் சென்ற பின் நான் வீட்டிற்கு வந்து பார்த்தபோது என்னுடைய குழந்தை இறந்தது என தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காவல் துறை துணை கண்காணிப்பாளர் சஞ்சய் ராணா “இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்து நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார். மேலும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின் அதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். காவல்துறையின் சோதனையின் போது நான்கு நாட்களான பச்சிளம் குழந்தை பிறந்து சம்பவம் நாட்டில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Baskar

Next Post

நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து வீட்டில் நகை பணம் போன்றவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள்......! அரியலூரில் துணிகரம்….!

Thu Mar 23 , 2023
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்த வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், 2️ பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். ரேணுகா மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் கழுத்தில் கிடந்த தாலி நகர்ந்து செல்வதை […]

You May Like