காவல்துறையினரால் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிடித் மாவட்டத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது . ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிடித் மாவட்டத்தில் ஒரு குற்றவாளியை தேடி காவல்துறையினர் ஒரு வீட்டை சோதனை செய்தபோது இந்த துக்க சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது. இறந்த குழந்தையின் தாத்தா பூஷன் பாண்டே ஒரு குற்ற வழக்கில் கைது செய்வதற்காக நான் பேய்லபிள் வாரன்ட்டுடன் காவல்துறையினர் அந்த வீட்டில் சோதனை நடத்தி இருக்கின்றனர். காவல்துறையினர் வருவதை கண்ட அந்த வீட்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் குழந்தையை தனியே விட்டுவிட்டு தப்பி சென்றதாக தெரிகிறது.
காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் புகுந்து குற்றவாளியை தேடி சோதனையில் ஈடுபட்டபோது உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை மிதித்ததாக தெரிகிறது. இச்சம்பவத்தில் பிறந்த நான்கு நாட்களேயான அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து அந்த குழந்தையின் தாய் நேகா தேவி தெரிவிக்கையில் “காவல்துறை எங்கள் வீட்டை சோதனை செய்யும் போது நாங்கள் அனைவரும் வெளியே சென்று விட்டோம். எனது குழந்தை வீட்டிலிருந்த ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தது. காவல்துறையினர் வீடு முழுவதும் சோதனை செய்தனர். அவர்கள் சென்ற பின் நான் வீட்டிற்கு வந்து பார்த்தபோது என்னுடைய குழந்தை இறந்தது என தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காவல் துறை துணை கண்காணிப்பாளர் சஞ்சய் ராணா “இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்து நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார். மேலும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின் அதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். காவல்துறையின் சோதனையின் போது நான்கு நாட்களான பச்சிளம் குழந்தை பிறந்து சம்பவம் நாட்டில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.