கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நோய் தொற்று பாதிப்பு இந்தியாவிற்குள் ஊடுருவியது. அதன் பிறகு 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் அதன் வீரியம் அதிகரிக்க தொடங்கியதையடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்து அதிரடி நடவடிக்கையால் மெல்ல, மெல்ல நோய் தொற்று பரவல் குறைய தொடங்கியது.
இந்த நிலையில், நாட்டில் நோய் தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. 97 நாட்களுக்கு பின்னர் தினசரி நோய் தொற்று பாதிப்பு 300க்கு மேல் கடந்துள்ளது. நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2686 ஆக அதிகரித்திருக்கிறது. சென்ற 24 மணி நேரத்தில் 334 பேருக்கு நோய் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நாட்டில் நோய் தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 775 ஆக அதிகரித்திருக்கிறது. நாட்டில் இதுவரையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரித்திருக்கிறது. சிகிச்சை பெற்று வருவது எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரித்துள்ளது.