புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இருக்கின்ற மயிலாடி காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த பவித்ரா( 21) என்றவர் தனியார் கல்லூரியில் பிஏ இறுதி ஆண்டு படித்து வருகின்றார். இவருடைய சித்தப்பா முறை உள்ள கருப்பையாவின் மகன் துரைக்கண்ணு (36) என்பவர் பவித்ராவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் விடாமல் பவித்ராவை அவர் தொந்தரவு செய்து இருக்கிறார்.
இத்தகைய சூழ்நிலையில்தான் பவித்ராவின் பெற்றோர் இல்லாத நேரமாக பார்த்து அவருடைய வீட்டிற்கு சென்ற துரைகண்ணு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பவித்ராவை வற்புறுத்தி இருக்கிறார். ஆனாலும் இதனை திட்டவட்டமாக மறுத்த பவித்ரா சத்தம் போட்டு இருக்கிறார். இதன் காரணமாக, ஆத்திரம் அடைந்த துரைக்கண்ணு கத்தியால் அவருடைய கருத்தை அறுத்து இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பவித்ரா துடிதுடித்து அதே இடத்தில் உயிரிழந்தார். அதன் பிறகு தன்னுடைய வீட்டிற்கு வந்த துரைகண்ணு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காலம் வரை இருவரின் உடல் அழகி மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.