fbpx

ஐயோ என் மானமே போச்சு….!, பாஜக நிர்வாகியால் பள்ளி மாணவி கதறல், போக்சோ சட்டம் பாய்ந்தது ….!

முன்பெல்லாம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூக விரோத செயல்களில் சமூக விரோத கும்பலை சார்ந்தவர்கள் தான் ஈடுபட்டு வந்தார்கள்.ஆனால் தற்சமயம் பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்களும், முக்கிய அரசியல் கட்சியில் பிரமுகராக இருப்பவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபட தொடங்கி விட்டார்கள்.
இவ்வளவு ஏன் முன்னாள் அமைச்சர்களும் கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தான் வினோத் (26) இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளராக இருக்கிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த சிறுமியிடம் அந்த இளைஞர் தன்னை காதலிப்பதாக தெரிவித்து திருமண ஆசை வார்த்தை கூறி, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றி விட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும் வினோத் அந்த சிறுமியிடம் பழகுவதையும், பேசுவதையும் தவிர்த்து வந்திருக்கிறார்.இது குறித்து அந்த சிறுமி வினோத்திடம் கேள்வி எழுப்பிய போது அந்த சிறுமிக்கு வினோத் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த சிறுமி சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரினை அடிப்படையாகக் கொண்டு திருவரங்கம் காவல்துறையினர் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திருவரங்கம் மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதன் பிறகு பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வினோத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்தொடர்ச்சியாக பாஜகவை சார்ந்தவர்கள் பாலியல் வழக்கில் அந்த கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

ஓடும் ரயிலில் கூட்டு பலாத்காரம்..!! டிக்கெட் பரிசோதகரால் திணறிய இளம்பெண்..!! பகீர் சம்பவம்..!!

Tue Jan 24 , 2023
உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவர் டிக்கெட் பரிசோதகரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 16ஆம் தேதி டேராடூன்-சுபேதர்கஞ்ச் விரைவு ரயில் பொதுப் பெட்டியில் 33 வயது பெண் ஒருவர் சந்தௌசியில் இருந்து பிரயாக்ராஜ் அருகே உள்ள சுபேதர்கஞ்ச் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் கே.என்.சிங் அந்த பெண்ணுக்கு ஏ.சி பெட்டியில் இருக்கை ஏற்பாடு செய்து கொடுக்க, அவரும் […]

You May Like