fbpx

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை -சுற்றுலாத்துறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே நமக்கு முதலில் தோன்றுவது பட்டாசுக்கள் தான் அதன் பிறகு தான் எல்லாமே. சென்னையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தீவுத்திடலில் மாபெரும் பட்டாசு விற்பனை நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டும் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை குறித்து அறிவிப்பை சுற்றுலாத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது. மேலும், விபத்தை தவிர்க்க ஒவ்வொரு கடைகளுக்கும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும், பட்டாசு விற்பனையில் ஈடுபடுவோர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இந்த தொழிலில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், என சில விதிகள் பட்டாசு கடைகளை அமைக்கும் உரிமையாளர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

ஆடைகளை நனைக்கும் அளவுக்கு இரவில் வியர்வை வருகிறதா?… உயிரை கொல்லும் கொடிய நோயின் அறிகுறியாகும்!

Wed Aug 23 , 2023
இரவில் அதிகப்படியான வியர்த்தல் புற்றுநோய் உட்பட பல்வேறு மருத்துவ நிலைகளின் பொதுவான அறிகுறியாகும். ஆடைகளை மற்றும் பெட்ஷீட்களை நனைக்கும் அளவுக்கு கடுமையான இரவு வியர்வைகள் பெரும்பாலும் மிகவும் தீவிரமான அடிப்படை மருத்துவ நிலையைக் குறிக்கின்றன. இந்தியாவில் பொதுவாகக் காணப்படும் காசநோய் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவைக் குறிக்கும் இரத்தச் சர்க்கரைக் குறைவு போன்ற நோய்த்தொற்றுகளும் பொதுவான காரணங்களில் அடங்கும். புற்றுநோயில் அதிக இரவு வியர்வையின் உடற்கூறியல் இன்னும் தெளிவாக இல்லை. […]

You May Like