தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே நமக்கு முதலில் தோன்றுவது பட்டாசுக்கள் தான் அதன் பிறகு தான் எல்லாமே. சென்னையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தீவுத்திடலில் மாபெரும் பட்டாசு விற்பனை நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டும் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை குறித்து அறிவிப்பை சுற்றுலாத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது. மேலும், விபத்தை தவிர்க்க ஒவ்வொரு கடைகளுக்கும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும், பட்டாசு விற்பனையில் ஈடுபடுவோர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இந்த தொழிலில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், என சில விதிகள் பட்டாசு கடைகளை அமைக்கும் உரிமையாளர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.