fbpx

அண்ணியுடன் எல்லை மீறிய உல்லாசம்….! தடையாக இருந்த அண்ணனை பிறந்தநாள் அன்று போட்டுத் தள்ளிய தம்பி அழுது நாடகமாடிய அண்ணி …!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்துள்ள சித்தேரி கிராமத்தில் நேற்று முன்தினம், ஒரு கொலை நடந்தது. அந்த கொலை நேற்று காலை காவல்துறையினருக்கு தெரிய வந்தது. விசாரணை நடைபெற்றது அந்த கொலை பற்றி தற்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதாவது, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்துள்ள சித்தேரி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(24) இவருடைய மனைவி யாமினி (20) இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை.

இந்த சூழ்நிலையில்தான், நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில், வீட்டை விட்டு வெளியேறிய விக்னேஷ், நேற்று காலை சித்தேரி மாந்தோப்பு பகுதியில் இருக்கின்ற கிணற்றின் அருகே, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக, அரக்கோணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆகவே, இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட விக்னேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பிறகு, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியானது. அதாவது, கொலை செய்யப்பட்ட வாலிபர் விக்னேஷின் சித்தியின் மகன் சதீஷ் (22) இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. சில மாதங்களாக சித்தேரி, விநாயகபுரத்தில் இருக்கின்ற ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கேயே தங்கி, கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது விக்னேஷின் வீட்டிற்கு அவ்வப்போது வந்து சென்றதால், அண்ணன் மனைவியான யாமினியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் தான், நேற்றைய தினம் விக்னேஷுக்கு பிறந்தநாள் என்று கூறப்படுகிறது.

ஆனால், இதற்கு முன்பாகவே, தங்களுடைய கள்ளக்காதலுக்கு விக்னேஷ் இடையூறாக இருக்கிறார் என்று, கள்ளக்காதவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து, விக்னேஷை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு, 11 மணி அளவில் விக்னேஷின் வீட்டிற்கு வந்த சதீஷ், நாளை உனக்கு பிறந்தநாள், ஆகவே, உனக்கு நான் பார்ட்டித் தருகிறேன் என்று வெளியே அழைத்துச் சென்றிருக்கிறார்.

அதன் பின்னர் மாந்தோப்பு பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள கிணற்றின் அருகே, அமர்ந்து இருவரும் மது குடித்திருக்கிறார்கள். இதில் விக்னேஷுக்கு அளவுக்கதிகமான மதுவை ஊற்றி கொடுத்து இருக்கிறார் சதீஷ். அதன் பிறகு, உனக்கு நான் சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் என்று சொல்லி, ஒரு கருப்பு துணியால் விக்னேஷின் கண்களை கட்டி விட்டார். அதன் பிறகு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், விக்னேஷ் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார். பின்னர் எதுவும் தெரியாததை போல, விநாயகபுரத்திற்கு சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

இதன் பிறகு நேற்று காலை இந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, விக்னேஷின் மனைவி யாமினியிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின், முரணாக பதில் அளித்ததால், அவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகவே, காவல்துறையினர் கெடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில், விக்னேஷின் தம்பியான சதீஷும், யாமினியும் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்தனர், அந்த கள்ளக்காதலுக்கு விக்னேஷ் இடையூறாக இருந்ததால், அவரை பிறந்தநாள் பார்ட்டி என்று அழைத்துச் சென்று, கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து, போட்ட திட்டப்படி, சதீஷ் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார் என்ற விவரம் தெரியவந்தது.

ஆனால், விக்னேஷை கொலை செய்து விட்டு, எதுவுமே தெரியாதே போல,கொலை நடைபெற்ற இடத்திற்கு வந்த சதீஷ், என்ன நடந்தது? என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்திருக்கிறார். இதற்கு நடுவில் நேற்று முன்தினம் இரவே, கொலை செய்யப்பட்ட சமயத்தில் சட்டையில் இரத்தக்கரை படிந்ததன் காரணமாக, தான் அணிந்திருந்த சட்டையை மறைவான பகுதியில் வைத்து சென்றார். அதோடு, அவர் அணிந்திருந்த பேண்ட்டை, பெட்டியில் மறைத்து வைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து, காவல்துறையினர், கள்ளக்காதலர்களான யாமினி மற்றும் சதீஷ் உள்ளிட்டோரை விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

ஜியோ வாடிக்கையாளர்களா நீங்கள்?… நாள் ஒன்றுக்கு 7-14 ஜிபி வரை டேட்டா பெறலாம்!… செப்.30க்குள் ரீசார்ஜ் செய்யுங்கள்!

Wed Sep 6 , 2023
ஜியோ நிறுவனத்தின் 7வது ஆண்டு நிறைவையொட்டி, ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு சில ரீசார்ஜ் திட்டங்களில் டேட்டா மற்றும் கூடுதல் கூப்பன்களை வழங்குகிறது. செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 30 வரை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ கூடுதல் டேட்டா மற்றும் கூப்பன்களை வழங்குகிறது. ஜியோ நிறுவனத்தின் இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட கால சலுகையாகும். ஜியோ நிறுவனம் தற்போதுள்ள ரூ.299, ரூ.749 மற்றும் ரூ.2999 ஆகிய மூன்று திட்டங்களில் இந்த […]

You May Like