fbpx

தெரு விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதற்கான திட்டம்…! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…!

கோடை காலத்தில் தெரு விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதற்கான திட்டங்கள் குறித்து அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

வெப்ப அதிகரிப்பு மனித ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, தண்ணீர் மற்றும் உணவுக்காக போராடும் தெரு விலங்குகளுக்கும் ஒரு பிரச்சனையாக இருப்பதாகக் கூறி, விலங்குகள் நல அறக்கட்டளையின் நிறுவனர் வி.இ.சிவா என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த கோடை காலத்தில் தெருநாய்கள், பூனைகள் மற்றும் இதர விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.

தெருவிலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்கக் கோரிய மனுவை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் நீதிபதி ஆர்.கலைமதி ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இந்த கோடை காலத்தில் தெருவிலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்குவதற்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. ஆறு வாரங்களுக்குள் அதற்கான திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Vignesh

Next Post

VIRAL: வேறொரு ஆணுடன் படுக்கையில் உல்லாசத்தில் இருந்த மனைவி…! கையும் களவுமாக பிடித்து வீடியோ எடுத்த கணவன்..!

Fri May 10 , 2024
நம்பிக்கை துரோகம் காரணமாக தான் பல குற்றசெயல்கள் நிகழ்கிறது. இது போன்ற பல சம்பவங்கள் இணையத்தில் வரைலாகி வருகிறது. முந்தைய காலத்தில் இந்த விஷயங்களை தங்கள் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் வைத்திருந்தாலும், சமூக ஊடகங்களின் வருகை மற்றும் சட்டரீதியான விளைவுகளால், மக்கள் பெரும்பாலும் தங்கள் தனிப்பட்ட வீடியோக்களை சமூக ஊடகங்களில் கசிய விடுகிறார்கள். கடந்த ஆண்டுகூட, மாலில் தனது மனைவி வேறொரு ஆணுடன் சுற்றித் திரிந்ததை கணவன் பிடித்துபோது அந்த […]

You May Like