தலைநகர் டெல்லியில் சுமார் 970 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகள் உடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது இந்த நாடாளுமன்ற கட்டிடம் இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் அதற்கான பூஜை மிகவும் சிறப்பாக நடந்தது பூஜையின் போது சிங்குல் வைத்து அதற்கு பூஜை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆதீனங்களின் காலில் விழுந்து பிரதமர் நரேந்திரமோடி ஆசி பெற்றார். அவர்களிடமிருந்து செங்கோலை பெற்றுக் கொண்டார். அதன் பிறகு செங்கோலை கையில் ஏந்தி கொண்டு அங்கிருந்து ஆதினங்களுடன் ஒன்றிணைந்து நடந்து மக்களவைக் கொண்டு வந்தார். இதனை அடுத்து நாதஸ்வரம் உள்ளிட்ட மங்கள வாத்தியங்களுடன் செங்கோல் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே அதற்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இடத்தில் நிறுவப்பட்டது அப்போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உடன் இருந்தார்.