கர்நாடக மாநில பகுதியில் உள்ள குடகு பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற பசுவுடன் ‘உறவு’ கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குடகு என்ற பகுதியில் சுண்டிகொப்பாவில் அந்தகோவே கிராமத்தில் வசிப்பவர் விவசாயி தேவய்யா(45) என்பவர்.
இவர் தினமும் தனது பசுவை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்.
வழக்கம் போல் சென்ற 27ம் தேதி அன்று தனது பசுவை அருகில் இருக்கும் வயலில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு, சந்தைக்கு சென்றுள்ளார்.வேலைகளை முடித்து விட்டு சந்தையில் இருந்து திரும்பிய தேவய்யா பசுவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர வயலுக்கு சென்றுள்ளார்.அச்சமயத்தில் அங்கே நடந்த நிகழ்ச்சியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வயலில் ஒருவர் பசுவுடன் உறவு கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். மேலும், அவரது பெயர் அபுபக்கர் சித்திக்(40) என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.