fbpx

’இன்னைக்கு நைட் என் கூடவே தங்கிரு’..!! ’நோ’ சொன்ன காதலிக்கு ஓட்டலில் நேர்ந்த விபரீதம்..!! காதலன் வெறிச்செயல்..!!

தன்னுடன் ஹோட்டலில் தங்க மறுத்த காதலியை காதலன் கொடூர முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த ரச்சனா என்ற பெண்ணும் கடந்த 3 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. அந்த வகையில், டிசம்பர் 25ஆம் தேதி இரவு இருவரும் சந்தித்துள்ளனர். அவர்கள் காசியாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, தன்னுடன் இரவு தங்க வேண்டும் என காதலியை கௌதம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கு அந்த இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில் ரச்சனாவை, கௌதம் கடுமையாக தாக்கியுள்ளார். பிறகு தன்னுடன் தங்க மறுத்த ஆத்திரத்தில் ரச்சனாவை, கௌதம் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

’இன்னைக்கு நைட் என் கூடவே தங்கிரு’..!! ’நோ’ சொன்ன காதலிக்கு ஓட்டலில் நேர்ந்த விபரீதம்..!! காதலன் வெறிச்செயல்..!!

மறுநாள் காலை, ஹோட்டல் ஊழியர்கள் அறையை சுத்தம் செய்ய வந்தபோது, அந்த பெண்ணின் உடல் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்பு இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியான கௌதமை போலீசார் கைது செய்தனர். பின்பு, ” நானும் ரச்சனாவும் கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்ததாகவும், ரச்சனா தன்னுடன் ஹோட்டலில் தங்க மறுத்ததால், ரச்சனாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும்” கௌதம் போலீஸில் வாக்குமூலம் அளித்ததார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

கோவை அருகே பணத்திற்கு ஆசைப்பட்டு மூதாட்டியை கொலை செய்த கல்லூரி மாணவர்!

Tue Dec 27 , 2022
கோவை மாவட்டம் சடையம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார்(22). இவர் கல்லூரியில் படித்து வருகிறார், இவருடைய தாயார் ஒரு தையல் தொழிலாளி.இந்த நிலையில், அவருடைய தையல் கடைக்கு சரோஜா என்ற 60 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய துணிகளை தைப்பதற்காக கொடுத்து வந்திருக்கிறார். எப்போதும் சரோஜாவின் துணிகளை தைத்துவிட்டு அதனை தன்னுடைய மகனிடம் கொடுத்தனுப்பி பணம் வாங்கி வர சொல்வாராம் வசந்தகுமாரின் தாயார். அதேபோல வசந்தகுமார் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். […]

You May Like