fbpx

அடப்பாவி கல்யாணம் ஆகி ஒரு வாரத்திலேயே சந்தேகம்…..! புது மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன், கடைசியில் கணவருக்கு நேர்ந்த சோகம்….!

திருமணம் ஆகி நான்கு மாதங்களே ஆன நிலையில், புது மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை கொடூரமாக கொலை செய்த கணவன், விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தை சேர்ந்த தீபா மற்றும் பங்கர் குடவை சேர்ந்த அருண் ஆகிய இருவருக்கும், கடந்த மே மாதம் 11ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் நடந்த ஒரு வாரத்திலேயே மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அருண், அவரை அடித்து கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

ஆகவே, தீபா, தன்னுடைய பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். தீபாவின் பெற்றோர் தீபாவுக்கு அறிவுரை கூறி சமாதானம் செய்து வைத்தனர். ஆனால், அருணின் கொடுமை நாட்கள் செல்ல, செல்ல அதிகரித்து வந்தது. இதன் காரணமாக, விரக்தி அடைந்த தீபா, தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

இதன் காரணமாக, கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தீபாவின் பெற்றோர் தீபாவை தங்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். சென்ற மாதம் 28ஆம் தேதி, தன்னுடைய மாமியார் வீட்டிற்கு சென்ற அருண், மனைவியை இனி கொடுமை செய்யாமல் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதி அளித்தார். இதனை உண்மை என்று நம்பிய தீபாவின் பெற்றோர், தீபாவை கணவரோடு அனுப்பி வைத்தனர். ஆனால், தீபாவை வீட்டிற்கு அழைத்து வந்த அந்த நாள் முதல், மறுபடியும் அருண் அவரை கொடுமைப்படுத்த தொடங்கி விட்டார்.

இந்த நிலையில் தான், கடந்த 1ம் தேதி இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரம் கொண்ட அருண், தீபாவின் தலையை சுவற்றில் மோதி இருக்கிறார். இதில், அவருடைய மண்டை உடைந்து,ரத்தம் கொட்டியது. வலியால் அலறி துடித்த அவரை, கண்டவுடன், அருணுக்கு ஆத்திரம் அதிகரித்து, இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த தீபாவை, கத்தியை எடுத்து, கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். அதன் பிறகு வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, காவல் நிலையத்தில் சரணடைவதற்காக சென்றார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்து கொண்ட அருணனின் தந்தை, காவல் நிலையத்திற்கு சரணடைவதற்காக சென்ற அருணை மீண்டும் வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனை தொடர்ந்து, அருண் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம், அருண் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில், பைக்கில் இருந்து, தூக்கி வீசப்பட்ட அருண், இரத்த வெள்ளத்தில், துடிதுடித்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்த காவல்துறையினர், கணவன், மனைவி இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, மருமகளை செய்ய உதவியாக இருந்த அருணின் பெற்றோர் ஜெயவந்த் ராவ், லட்சுமி உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர்.

Next Post

கண்புரையை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் AI-செயலி உருவாக்கம்!… 17 வயது மாணவன் அசத்தல்!

Mon Sep 4 , 2023
லக்னோவை சேர்ந்த 17வயது சிறுவன், கண்புரையை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் AI-அடிப்படையிலான செயலியை உருவாக்கியுள்ளார். உத்தரபிரதேச தொழில்நுட்ப ஆதரவு பிரிவு மற்றும் ஆய்வு கூடம் ஏற்பாடு செய்த இலவச கண் பரிசோதனை முகாமின் போது இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. எஹ்சானில் உள்ள ஸ்டடி ஹால் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் வசந்த் குமர் என்ற மாணவர், தேசிய சுகாதார இயக்கம் மற்றும் இந்தியா ஹெல்த் ஆக்ஷன் டிரஸ்ட் இணைந்து […]

You May Like