fbpx

’பயங்கர கோவக்காரரோ’..? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்..!! தொண்டரை ஓங்கி அடித்து தள்ளிவிட்ட கே.என்.நேரு..!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கை கொடுக்க வந்த திமுக தொண்டரை சட்டையை பிடித்து ஓங்கி அடித்து அங்கிருந்து தள்ளிய அமைச்சர் கே.என்.நேருவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசல் பகுதியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு திமுக சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியினர் அமைச்சரை வரவேற்று சால்வை அணிவித்து கொண்டிருந்தனர். உதயநிதி ஸ்டாலின் அருகே அமைச்சர் கே.என்.நேரு நின்று கொண்டிருந்தார். வரிசையாக திமுக தொண்டர்கள் சென்று உதயநிதிக்கு சால்வை கொடுத்து அவருக்கு வணக்கம் வைத்து விட்டு செல்கின்றனர். ஒரு தொண்டர் உதயநிதிக்கு கை கொடுக்க முயன்ற போது அமைச்சர் நேரு அவரை ஓங்கி அடித்து சட்டையை பிடித்து தள்ளினார். அப்போதும் ஆத்திரம் தீராமல் பின்பக்கமாக கழுத்தை பிடித்து அங்கிருந்து தள்ளினார்.

பயங்கர கோவக்காரரோ..? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்..!! தொண்டரை ஓங்கி அடித்து தள்ளிவிட்ட கே.என்.நேரு..!!

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் முக.ஸ்டாலின் பங்கேற்க சென்ற நிகழ்ச்சிக்கு ஆய்வுக்கு சென்ற பால்வளத்துறை அமைச்சர் நாசர், தனக்கு நாற்காலி தரவில்லையென்று கட்சி தொண்டர் ஒருவரை மண்ணாங்கட்டியால் அடித்த காட்சி இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனத்தை சந்தித்தது.

Chella

Next Post

’வேலை தேடும் பெண்களே உஷார்’..!! வங்கிக் கணக்கில் இருந்து மாயமாகும் பணம்..!! இப்படியும் மோசடிகள் நடக்குது..!!

Fri Jan 27 , 2023
பட்டதாரி பெண்ணுக்கு, கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்த உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் உட்பட இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா (25). பி.இ. பட்டதாரியான இவர், வெளிநாட்டில் வேலை தேடி ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்ட நபர், தான் இந்தியாவுக்கான […]

You May Like