தேசிய செய்திகள்

சினிமா 360°

  • கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது.. உச்சநீதிமன்றம் அதிரடி..

    கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது..

    மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான படம் தக்லைஃப். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, ​​”தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது” என்று கமல்ஹாசன் கூறிய கருத்து, கர்நாடகாவில் கடும் சர்ச்சையை கிளப்பியது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் படத்தை வெளியிட முடியும் என்று அம்மாநில திரைப்பட வர்த்தக சங்கம் கூறியது. தான் தவறு செய்யவில்லை என்று கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், பாதுகாப்பு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இருப்பினும், கர்நாடக உயர்நீதிமன்றம் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பரிந்துரைத்தது, ஆனால் கமல்ஹாசன் அதனை ஏற்க மறுத்துவிட்டார். அவர் நேரடியாக மன்னிப்பு கேட்க மறுத்ததன் விளைவாக, கர்நாடகாவில் படத்தின் வெளியீடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ‘தக் லைஃப்’ திரைப்படத்தைத் திரையிடுவதற்கு கர்நாடகா விதித்த “நீதித்துறைக்கு அப்பாற்பட்ட தடையை எதிர்த்து, பெங்களூருவைச் சேர்ந்த எம். மகேஷ் ரெட்டி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (CBFC) சான்றிதழ் இருந்தபோதிலும், கர்நாடக அரசு வாய்மொழி அறிவுறுத்தல்கள் மற்றும் காவல்துறை தலையீடு மூலம் தக் லைஃப் திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டைத் தடுத்ததாக கூறியிருந்தார்.

    மொழியியல் சிறுபான்மையினரைத் தாக்கி திரையரங்குகளை எரிக்க அழைப்பு விடுத்த தீவிரவாத சக்திகளுக்கு கர்நாடக அரசு முழுமையாக சரணடைந்துள்ளது” என்று வேலன் மனுவில் கூறியிருந்தார்.. இந்தத் தடை, சினிமா அரங்குகளுக்கு எதிராக தீ வைப்பு அச்சுறுத்தல்கள், மொழியியல் சிறுபான்மையினரைக் குறிவைத்து பெரிய அளவிலான வகுப்புவாத வன்முறையைத் தூண்டுதல் மற்றும் கடந்த கால தமிழ் எதிர்ப்பு கலவரங்களை மீண்டும் செய்வதற்கான ஒரு அழைப்பு உள்ளிட்ட வேண்டுமென்றே செய்யப்பட்ட பயங்கரவாத பிரச்சாரத்திலிருந்து வருகிறது என்றும் கூறியிருந்தார்.

    “இந்த மிரட்டல் ஆட்சி பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் (பிரிவு 19(1)(a)) மற்றும் எந்தவொரு தொழிலையும் மேற்கொள்வதற்கான அடிப்படை உரிமைகளை (பிரிவு 19(1)(g)) நேரடியாகவும், வெளிப்படையாகவும் மீறுவதாகும். இன்னும் தீவிரமாக, இது மாநிலத்தின் மதச்சார்பற்ற அமைப்பு மற்றும் பொது ஒழுங்கின் மீதான திட்டமிட்ட தாக்குதல்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு கடந்த 13-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ. வேலன், இதுபோன்ற நடவடிக்கைகள் அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a) இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துரிமை மீதான அரசியலமைப்பிற்கு முரணான கட்டுப்பாட்டிற்குச் சமம் என்று வாதிட்டார்.

    இதை தொடர்ந்து நீதிபதிகள், தக்லைஃப் படத்திற்கு தடை விதித்தது தொடர்பாக கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கர்நாடக தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர் (உள்துறை) மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் மனு மீதான விசாரணையை ஜூன் 17-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்..

    அந்த வகையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.. நமது வீதிகளை குண்டர்கள் கைப்பற்ற அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் திரைப்படத்தை பார்க்க அனைவருக்கும் உரிமை உண்டு.. படத்தை பார்த்து மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும் என்று தெரிவித்தனர்.

    கர்நாடக அரசு இதுகுறித்து முடிவு செய்து பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தடையில்லா சான்றிதழ் பெற்ற பின், படத்திற்கான பாதுகாப்பை மாநில அரசு தான் வழங்க வேண்டும். கர்நாடகத்தில் படத்தை திரையிடுவது தொடர்பாகவும், வெளியிட்டால் வழங்கப்படும் பாதுகாப்பு குறித்தும் கர்நாடக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

உலகம்

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவாத் சமீபத்தில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் “ அறிவியல் பூர்வமான […]

மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் ஈரான்-இஸ்ரேல் மோதலின் பின்னணியில், இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) முக்கிய நடவடிக்கையாக 24×7 கட்டுப்பாட்டு அறையை டெல்லியில் செவ்வாயன்று (ஜூன் 17) நிறுவியுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது X பக்கத்தில், “ஈரான் மற்றும் இஸ்ரேலில் நடைபெறும் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறை தொடர்பு […]

வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி வணிக அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் முன்னணி வங்கிகளுடன் இணைந்து, டிஜிட்டல் ஒப்புதல் முறைமை ஒன்றை நடைமுறையில் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் ஒப்புதல்கள் இனி ஆஃப்லைனில் இல்லாமல், சரிபார்க்கக்கூடிய டிஜிட்டல் பதிவாக இருக்கும். இதன் மூலம், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், தங்களது […]

பில்லியன் கணக்கான பயனர்களைப் கொண்ட வாட்ஸ்அப்பில், வரும் காலங்களில் விளம்பரங்கள் தோன்றவுள்ளன என்று மெட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் தனிப்பட்ட அரட்டைகள், அழைப்புகள், குழு உரைகள் ஆகியவை விளம்பரமில்லாமல் இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. பயனரின் அனுபவத்தை பாதிக்காமல், தளத்தை வருவாயின் மூலமாக மாற்றும் நோக்கத்தில் மெட்டா இந்த புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரைகள், அழைப்புகள், ஸ்டேட்டஸ்கள் அனைத்தும் குறியாக்கம் செய்யப்பட்டவை என்றும், அவை விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படமாட்டாது […]

தமிழக ADGP ஹெச்.எம். ஜெயராமனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் அருகே நடந்த காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தமிழகத்தின் உயர் காவல்துறை அதிகாரியான ADGP ஹெச்.எம். ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை, அரசு உள்துறை செயலாளர் இன்று வெளியிட்டார். […]

ஈரானை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏபிசி நியூஸுக்கு அளித்த நேர்காணலில், “ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொல்வது தான் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரே வழி” என்று நெதன்யாகு கூறினார். ஈரானை தொடர்ந்து இலக்காகக் […]