fbpx

மாதம் ரூ.20,500 வருமானம்.. போஸ்ட் ஆபீஸின் சூப்பரான திட்டம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

போஸ்ட் ஆபீஸில் துவங்கப்பட்ட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மூலம் வயதானவர்களுக்கு ஓய்வு காலத்தில் ரூ.20,500 மாத வருமானமாக வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மத்திய அரசானது மூத்த குடிமக்களை கருத்தில் கொண்டு அவர்களது முதுமை காலத்தில் உதவும் வகையில், “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை” போஸ்ட் ஆபீஸ் மூலமாக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இணையும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,500 வருமானமாக வழங்கப்படும். அதாவது, இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு மாதம் ரூ.20,500 வட்டியாக மத்திய அரசு மூலம் செலுத்தப்படுகிறது. இத்தகைய சேமிப்பு திட்டத்தின் பலனை 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே பெற முடியும். மேலும் சூப்பர் ஆனுவேஷன், விஆர்எஸ் அல்லது சிறப்பு விஆர்எஸ் பெற்றவர்களும் இதன் பலனை பெறலாம்.

இத்திட்டத்தில் இணையும் நபர்கள் 1000 மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதவாது பயனர்கள் 1,000 ரூபாய் முதல் 30 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். இவ்வாறு முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு அரசு 8.2% வட்டி வழங்குகிறது. இந்த வட்டி தொகையானது ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் பயனர்களின் கணக்கில் செலுத்தப்படும். இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும், வருமான வரி சட்ட பிரிவு 80C-ன் படி, பயனர்கள் 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறுவார்கள்.

Read more ; உலகின் முதிய பெண்மணி 117 ஆவது வயதில் காலமானார்..!!

English Summary

The Senior Citizens Savings Scheme launched by the Post Office provides a monthly income of Rs 20,500 to the elderly during their retirement. We will see the details about it in this post.

Next Post

மாயமான பயிற்சி விமானம்!. 2வது நாளாக தேடும் பணி தீவிரம்!. ஜார்க்கண்டில் அதிர்ச்சி!

Wed Aug 21 , 2024
Trainer aircraft goes missing after take-off

You May Like