fbpx

#திருச்சி: கோழி இறைச்சி சாப்பிட்ட பெண் பரிதாப உயிரிழப்பு..!

திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். வேலை செய்பவர்களில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கோனிகா(19) என்ற இளம் பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளார். 

சம்பவத்தன்று கோனிகா கோழி இறைச்சி சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த உணவு ஒற்றுக்கொள்ளாமல் வாந்தி எடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

மருத்துவமனையில் சிகிச்சைக்கு அளித்த பிறகும் தொடர்ந்து கோனிகாவுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது. மேற்படி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

திருச்சி மருத்துவமனையில் இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது பற்றி வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

“அன்றும், இன்றும், என்றும் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் தான்..” மீண்டும் விஜய் ரசிகர்களை கடுப்பேற்றிய ரஜினி ரசிகர்கள்..

Fri Jan 20 , 2023
நடிகர் விஜய், அஜித் இருவரும் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக உள்ளனர்.. இந்த 2 உச்ச நடிகர்களும் தங்களுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர்.. எனவே சமூக வலைதளங்களில் அவ்வப்போது விஜய் – அஜித் ரசிகர்களிடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.. இதனிடையே பொங்கல் பண்டிகையை ஒட்டி விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் வெளியாகின.. இந்த படங்கள் வெளியாவதற்கு முன்பே வாரிசு படத்தின் தயாரிப்பாளர் விஜய் தான் […]

You May Like