fbpx

”விவசாய நிலங்களை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை”..! அமைச்சர் எ.வ.வேலு

பொது நோக்கத்திற்கான திட்டங்கள் வரும்போது, விவசாய நிலத்தை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சர்வே எண் அடிப்படையில் நிலத்தின் மதிப்பு மாறுபடும். எனவே, கையகப்படுத்தும் நிலத்திற்கான சந்தை விலையைவிட 3 அரை மடங்கு இழப்பீடு அதிகமாக வழங்கப்படும். 13 கிராமத்தில், 1005 வீடுகள் அப்புறப்படுத்த உள்ளோம். கையகப்படுத்தும் நிலத்திற்கு பணமும், வீடு கட்டுவதற்கு நிலமும்-பணமும் வழங்க உள்ளோம். விமானநிலையம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகாமையில், விரும்பக்கூடிய இடத்தில் வசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். அப்பகுதியில் வசிப்பவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும். விவசாயிகள் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்.

”விவசாய நிலத்தை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை”..! அமைச்சர் எ.வ.வேலு

ஆனால், இதுபோன்ற பொது நோக்கத்திற்கான திட்டங்கள் வரும்போது விவசாய நிலத்தை எடுப்பதை தவிர வேற வழி இல்லை. பெங்களூரு, ஹைதராபாத் வளர்ச்சி நம்மை விட கூடுதலாக உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், நமக்கு புதிய விமான நிலையம் அவசியமாக உள்ளது. பன்னூர், பரந்தூர் ஆகிய இடங்களை ஒப்பிட்டு பார்க்கையில், பரந்தூரில் குறைந்த வீடுகள் தான் உள்ளது. அதனால் தான் பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்படும் மக்களும் குறைவு. தமிழ்நாட்டின் பொருளாதாரம், அந்நிய செலாவணி ஈட்டுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளார். விமான நிலையம் அமைக்கப்படவுள்ள 13 கிராமங்களில், நன்செய் 2446.79 ஏக்கர், புன்செய் நிலம் 799.59 ஏக்கருக்கு 1317.18 ஏக்கர் அரசு புறம்போக்கு உள்ளது. 4563.56 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளோம். 3246 ஏக்கர் பட்டா நிலம் உள்ளது”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர்களை; கவர்னர் இழிவு படுத்துவது அழகல்ல... கே.எஸ்.அழகிரி அறிக்கை..!

Fri Aug 26 , 2022
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- டெல்லியில், நடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில், வழக்கம்போல் வகுப்புவாத விஷத்தை கக்கி தன்னை தீவிர ஆர்.எஸ்.எஸ்.காரராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. காட்டிக் கொண்டுள்ளார். திருக்குறளில் ஜி.யு. போப் அளித்த மொழிபெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே நீக்கப்பட்டதாக போகிற போக்கில் பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார். அதோடு, அனைத்துக்கும் பொதுவான ஆதிபகவன் என்ற வார்த்தையையும் தவிர்த்துள்ளதாக கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு […]

You May Like