fbpx

சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம், இத்தனை ஆயிரமா??

எத்தனை படங்கள் வந்தாலும் பெண்கள் மத்தியில் என்றும் நிலைத்திருப்பது சீரியல் தான். அதிலும் சில சீரியல்களில் நடிப்பவர்களுக்கு தீவிர ரசிகர் பட்டாளமே இருப்பது உண்டு. இன்னும் சிலர் சீரியலில் வரும் காதபாத்திரங்களை நிஜ வாழ்கையில் தங்களோடு இருப்பவர்கள் போல் திட்டுவது உண்டு, அட்வைஸ் பண்ணுவது உண்டு. இந்நிலையில், டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்திருப்பது சன் டிவி சீரியல் தான். சன் டிவியில் காலையில் இருந்து இரவு வரை சீரியல்கள் ஓடிக்கொண்டிருக்கும்.

பாண்டவர் இல்லம், மீனா, அருவி, ஆனந்தராகம், புது வசந்தம், கயல், சுந்தரி, எதிர்நீச்சல், வானத்தைப்போல, இனியா, மிஸ்டர் மனைவி என பல சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியல்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் பலர் நடித்திருந்தாலும் அதில் ஹிரோயின்களுக்கு என்று தனி இடம் உண்டு. அந்த வகையில், உங்களுக்கு பிடித்த ஹிரோயின்களுக்கு ஒரு நாள் சம்பளம் என்ன தெரியுமா??

இதில் கயல் சீரியலில் நடிப்பவர் நடிகை சைத்ரா ரெட்டி. யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இவர். கயல் சீரியலில் நடிப்பதற்கு நாள் ஒன்றுக்கு இவர் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அது போல சுந்தரி சீரியலில் நடிக்கும் கேப்ரெல்லா செல்லஸ், ஆரம்பத்தில் ஒரு மாடலாகவும் டிக் டாக் பிரபலமாகவும் ஸ்கிரிப்ட் எழுத்தாளராகவும் தன்னுடைய பயணத்தை தொடங்கி, இப்போது சன் டிவியில் சுந்தரி சீரியல் மூலமாக பலரின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

ராஜா ராணி சீரியலில் செம்பா கேரக்டர் மூலம் பல ரசிகர்களை உருவாக்கிக் கொண்ட ஆல்யா மானசா, ராஜா ராணி 2 சீரியலிலும் சந்தியாவாக நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகிய இவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் இந்த சீரியலுக்காக நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.

மக்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த சீரியலில் ஜனனியாக நடித்து வரும் மதுமிதா நாள் ஒன்றுக்கு 15ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இவர் கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்து, தற்போது முதல்முறையாக தமிழில் நடிக்கிறார்.

Maha

Next Post

ட்ரங்க் பெட்டியில் இருந்த குழந்தைகளின் சடலம்; தாய் அளித்த பரபரப்பு வாக்குமூலம்..

Tue Oct 3 , 2023
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள கான்பூர் கிராமத்தில் வசித்து வருபவர், சுஷில். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரது மூத்த மகள் 9 வயதான அமிர்தா குமாரி, இரண்டாவது மகள் 7 வயதான சாக்ஷி மற்றும் மூன்றாவது மகள் 4 வயதான காஞ்சன். கடந்த ஞாயிற்றுக்கிழமை, சுஷிலின் மூன்று குழந்தைகளும் காணாமல் போய்விட்டனர். ஆனால் பெற்றோர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, சுஷில் வாடகைக்கு குடியிருந்த […]

You May Like