fbpx

செல்போனில் பேசியதால் ஏற்பட்ட சோகம்.. மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்த மாணவி..!

கல்லூரி பெண் ஒருவர் தான் தங்கியிருந்த விடுதி அமைந்துள்ள இடத்துக்கு மிக அருகிலேயே துணை மின் நிலையத்துக்குச் செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் அந்த பெண் தனது தொலைபேசியை சார்ச் செய்து விட்டு வேலை குறித்து உரையாடிக் கொண்டிருந்ததாக தெரியப்படுகிறது. 

அங்கே காய்ந்து கொண்டிருந்த ஆடை ஒன்று மின்சார கம்பியின் மீது விழுந்ததையடுத்து அதை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது, உயர் அழுத்த மின்சார வடத்தில் இருந்து குறித்த பெண் மீது பாய்ந்ததில் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து அந்தக் கட்டடம் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததால் விடுதியிலிருந்து மற்ற பெண்களின் மீதும் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், விபத்து குறித்து தாம்பரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Baskar

Next Post

பாத்ரூம் ஜன்னல் வழியாக.. பெற்ற குழந்தையை சில நொடி நிமிடத்தில் தூக்கி வீசிய தாய்..!

Wed Jan 18 , 2023
நவி மும்பையில் உள்ள உவ்வே பகுதியில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியின் அருகில், பிறந்து சில மணிநேரம் ஆன குழந்தை ஒன்று கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி […]

You May Like