TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
கடந்த சில வாரங்களாகவே பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க நிர்வாகிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. மேலும் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, அன்புமணிக்கு ஆதரவு அதிகமாகவுள்ள பகுதிகளை குறிவைத்து, அங்கிருக்கும் நிர்வாகிகளை ராமதாஸ் மாற்றி வந்ததாக கூறப்பட்டது. […]
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Engineer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் M.E, M.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 3 ஆண்டுகள் அனுபவம் […]
தங்கம் வாங்குவது என்பது அனைவருக்கும் ஆசையான விஷயமாக இருக்கும். எனவே, எப்போது விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பர். கொரோனாவுக்கு முன்பு வரை ஆபரணத் தங்கம் ரூ.3500 என்ற ரேஞ்சிலேயே இருந்தது. ஆனால், அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகே குறையவில்லை. அமெரிக்க நாட்டின் அதிபராக டிரம்ப் பதவியேற்றது மற்றும் உலகில் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் போர் உள்ளிட்ட காரணத்தால் தங்கத்தின் […]
“Paris Kids Fashion Week” என்ற பெயரில் ஒரு சீன நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் ஃபேஷன் ஷோ நடத்தி வருகிறது. பல பாரிஸ் ஃபேஷன் வீக்குடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பெற்றோர்களை ஏமாற்றி பணம் வசூலித்தது. உண்மையில் பாரிஸ் ஃபேஷன் வீக்குடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத இந்த நிறுவனம், உலகின் முக்கியமான ஃபேஷன் மேடைகள், பிரபல பிராண்டுகள் மற்றும் புகழ்பெற்ற கலைக் கூடங்களின் பெயர்களை தவறாக […]
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் இன்று (ஜூன் 5, 2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் X தளத்தில் தங்களது கருத்துக்களை உற்சாகமாகப் பகிர்ந்து வருகின்றனர். கமல்ஹாசனின் தீவிரமான நடிப்பு, சிலம்பரசனின் ஆற்றல்மிக்க கதாபாத்திரம் மற்றும் மணிரத்னத்தின் தனித்துவமான இயக்கம் பலராலும் பாராட்டப்படுகிறது. நாயகன் (1987) படத்தில் கடைசியாக இணைந்து பணியாற்றிய பிறகு, கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு மணிரத்னம் […]
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,300-ஐ கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால், பாதிக்கப்பட்டு முதியவர், இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தென் மாநிலங்களில் தான் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுவாச பிரச்சனை, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்படும் இணைநோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு கொரோனா […]
தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடந்தாண்டை விட இந்தாண்டு அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும், இந்த பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி முதல் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் […]
சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 01 ஆக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் […]
ஜோதி மல்ஹோத்ராவுடன் தொடர்பில் இருந்ததாகவும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற உளவு வலையமைப்பில் ஈடுபட்டதாகக் கூறி, 1.1 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் “ஜான் மஹால்” சேனலை நடத்தி வரும் மற்றொரு யூடியூபர் ஜஸ்பீர் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர் . பஹல்காம் தாக்குதல் சம்பவத்தையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. அமெரிக்காவின் தலையீட்டு […]
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பகுதியளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை நள்ளிரவு 12:01 மணி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் […]