fbpx

போதை மயக்கத்தில் மனைவியை கொடூரமாக வெட்டி கொலை செய்த கணவன்….! ஆதரவின்றி நிற்கும் குழந்தைகள்….!

சென்னை அருகே, குடிபோதைக்கு அடிமையான கணவன், மனைவியை கொடூரமாக வெட்டி கொலை செய்ததால், குழந்தைகள் நிற்கதியாக நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை அருகே உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முனியம்மாள் (20), செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த புருஷோத்தமன் (25), இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் தான், இந்த தம்பதிகள் கூலி வேலை செய்து கொண்டு, தங்களுடைய குழந்தைகளுடன் வாசித்து வருகின்றனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான புருஷோத்தமன் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து, தன்னுடைய மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது.

அந்த வகையில், வழக்கம் போல நேற்று மாலை 5.30 மணி அளவில் தலைக்கேறிய போதையில், வீட்டிற்கு வந்த புருஷோத்தமன், தன்னுடைய மனைவியுடன், தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்பு மோதலாக மாறி இருக்கிறது. இதில் ஆத்திரம் கொண்ட புருஷோத்தமன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, முனியம்மாளின் கழுத்தில் வெட்டி இருக்கிறார். இதில் முனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து, உயிரிழந்தார்.

முனியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில், இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது, தப்பிச்சென்றுவிட்டார். பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், முனியம்மாளின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு புருஷோத்தமனை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான புருஷோத்தமன், தன்னுடைய மனைவியை கொலை செய்து, அவரும் சிறைக்கு சென்று விட்ட நிலையில், அந்த மூன்று குழந்தைகளும் தற்போது ஆதரவின்றி நிற்கிறார்கள். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

சென்னை மற்றும் அதன் புறநகர் புறநகர்ப்பகுதிகளில் கனமழை….! வானிலை ஆய்வு மையம் தகவல்…..!

Mon Aug 14 , 2023
தற்போது தலைநகர் சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும், விட்டு,விட்டு மழை பொழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.தலைநகர் சென்னையில், நேற்று பிற்பகல் ஆரம்பமான கனமழை, இரவு முழுவதும் பொழிந்தது. இதனால், குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால், மக்கள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர். ஆனாலும், இன்று காலை முதல், மறுபடியும் வெயில் சற்று அதிகரித்து காணப்பட்ட நிலையில், பிற்பகலுக்கு பின்னர், சென்னை புறநகர் பகுதிகளில், மழை பொழிய தொடங்கியது.அதாவது, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான, திருவொற்றியூர், […]

You May Like