fbpx

மகிழ்ச்சி செய்தி…!சமூக நல மாத ஓய்வூதியம் ரூ1,600 இரண்டு தவணைகளும் வழங்கப்படும்…! அரசு அறிவிப்பு…!

கேரளாவில் நிலுவையில் உள்ள சமூக நல ஓய்வூதியத்தில் மேலும் இரண்டு தவணைகளை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.

மாநில நிதியமைச்சர் பால கோபால் கூறியதாவது; மார்ச் மாதத்தில், ரூ.1,600 மாத சமூக நல ஓய்வூதியம் ஆறு மாதங்களாக நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் ஒரு தவணைத் தொகையை செலுத்தப்பட்டது. இந்த நிலையில் ரம்ஜான் மற்றும் விஷு பண்டிகைக்கு முன்னதாக அடுத்த ஒதுக்கீட்டை செவ்வாய் முதல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார்.

இந்தத் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் அல்லது கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்படும். சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கான ஓய்வூதிய நிலுவை தொகை மாநில அரசு வழங்காமல் ஏமாற்றிவிட்டது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மிகப்பெரிய பிரச்சாரத்தில் ஒன்றாகும்.

இந்த நிலையில் நிலுவையில் உள்ள சமூக நல ஓய்வூதியத்தில் மேலும் இரண்டு தவணைகளை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் 20 புதிய மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை!… 2 நாட்கள் பிரமாண்ட ரோடு ஷோவில் பிரதமர் மோடி!

Mon Apr 8 , 2024
Modi: பிரதமர் மோடியின் வாகனப் பேரணி நடைபெற இருப்பதையொட்டி, சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைக்காக 6-வது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ளார். நாளை சென்னை வரும் பிரதமர் 2 நாட்கள் தங்கியிருந்து ஆதரவு திரட்டவுள்ளார். சென்னை பாண்டிபஜார் பகுதியில் நாளை வாகன பேரணி நடத்தவுள்ள பிரதமர் மோடி, தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், வடசென்னை பாஜக வேட்பாளர் பால கனகராஜ், மத்திய சென்னை […]

You May Like