தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள , பாப்பாரப்பட்டியில் வசித்து வரும் 24 வயது இளம்பெண், சென்ற 16ம் தேதி தர்மபுரியை சேர்ந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்த போது அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை பலனின்றி அங்கேயே உயிரிழந்துள்ளார்.
இது பற்றி மருத்துவ துறையில் இருந்து அதிகாரிகள் விசாரித்ததில், அப்பெண்ணுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்னர் , தர்மபுரி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அவர் கர்ப்பமாகியுள்ளார்.
எனவே அதனை கலைக்க முற்பட்ட போது பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள மெடிக்கலில் சென்ற 15ம் தேதியே கருத்தடை மாத்திரைகளை வாங்கி உட்கொண்டுள்ளார். இதனால் அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து தர்மபுரி மாவட்ட நலப்பணிகள் காவல்துறையினர் அந்த மெடிக்கலில் சோதனை நடத்தியுள்ளார்.
சோதனையில் அரசு அனுமதி பெறாமலே கிளினிக் நடத்திக் கொண்டும் மற்றும் கருத்தடை மாத்திரைகளை பொது மக்களுக்கு விற்று வந்ததும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கடைக்கு சீல் வைத்து கடையின் உரிமையாளரான செல்வராஜை (43) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.