fbpx

மகளிர் டி20 உலகக்கோப்பை..!! இன்று அரையிறுதிப் போட்டி..!! இந்தியா – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை..!!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி இன்று நடக்கிறது.

ஐசிசி நடத்தும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இதில் குரூப் 1ல் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் 2ல் இருந்து இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதில், இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலியா, அதே நம்பிக்கையுடன் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற முனைப்புடன் இருக்கிறது. அதே சமயம், லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் தோல்வியை சந்தித்த இந்திய அணி, பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது.

இந்திய அணி இந்த முறையாவது சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கேப்டவுனில் இன்று நடைபெற உள்ள இந்தியா – ஆஸ்திரேலியா அரையிறுதிப் போட்டியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேரில் காண உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

Chella

Next Post

4 வயது குழந்தையை கொலை செய்து தம்பதி தற்கொலை….! காரணம் என்ன….?

Thu Feb 23 , 2023
மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும். இன்னும் சொல்லப்போனால் பிரச்சனை இல்லாத மனிதனே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாம் பிறந்ததிலிருந்து உயிரிழக்கும் வரையில் பிரச்சனை நமக்கு இருந்து கொண்டு தான் இருக்கும். அந்த பிரச்சனையை நேராக என்று எதிர் கொள்ள வேண்டுமே தவிர, அந்தப் பிரச்சனைக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வது எந்த விதத்திலும் தீர்வாகாது.அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பட்டு கிராமத்தை […]

You May Like