பூனை மீசையின் தோற்றம் கொண்ட மூலிகையின் உடல் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்ளலாம்.
பூனை மீசை போன்று இருப்பதால் இந்த மூலிகைக்கு பூனை மீசைஎன்று பெயர் வந்தது. இதன் இலைகளுடன் மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வர சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் தீரும்.சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீரக கோளாறுகள் போன்ற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை. கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய், கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது. தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை வெளியற்றுகிறது. சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது.
சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலை,மாலை வேளைகளில் இதன் சாறு அருந்துவதன் மூலம் கட்டுக்குள் கொண்டுவரலாம். இந்த கசாயம் தயாரிக்க, பூனை மீசை மூலிகையை நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளை கால் குவளையாக வரும் வரை செய்து குடிக்க வேண்டும். சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் .அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு குறையும். சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது .
இந்த பூனை மீசை -செடியின் காய்ந்த சமூலம் என்னும் மொத்த செடியின் காய்ந்த மூலிகை -நிச்சயமாக கிட்னி பெயிலியர்க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது ,இரத்தத்தில் உள்ள யூரியா ,க்ரியாடின் அளவை குறைக்க உதவுகிறது ..எல்லா கிட்னி பெயிலியர் என்னும் சிறுநீரக செயல் இழப்புக்கும் இந்த அற்புத மூலிகை பயன்பட்டாலும் -ஒவ்வொரு மனிதருக்கும் அது வேலை செய்யும் விதம் மாறுபடுகிறது. மேலும், இந்த மருந்தை வைத்து கிட்னி பெயிலியரை முழுவதுமாக குணப்படுத்த முடியும் என்று சொல்ல முடியாது என்றாலும் இரத்தத்தில் உள்ள யூரியா ,க்ரியாடின் அளவை குறைக்க உதவுகிறது .