தனியார் பள்ளியில் 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு வரும் 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தனியார் பள்ளி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009இன் படி 2023-24ஆம் கல்வி ஆண்டில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்கேஜி வகுப்பிலும், 1-ம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20-ம் தேதி முதல் மே மாதம் 18-ம் தேதி வரை rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம்விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்