புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு (விஷ்ணுவுக்கு) உகந்த மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும், குறிப்பாக மூன்றாவது சனிக்கிழமை, பெருமாளை வீட்டிற்கு அழைத்து சிறப்பு வழிபாடுகள் செய்வது பலரின் வழக்கம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளில் சனி மகா பிரதோஷம் இணைவது கூடுதல் சிறப்பம்சமாகும். பிரதோஷம் என்பது சிவபெருமானுக்குரிய வழிபாட்டுக் காலமாகும். எனவே, புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை மற்றும் சனி மகா பிரதோஷம் இணைந்து வரும் […]

தேசிய நெடுஞ்சாலைகளில் QR குறியீடு தகவல் பலகைகளை நிறுவ இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது . தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கியூ.ஆர். குறியீடு கொண்ட தகவல் பலகைகளை நிறுவவுள்ளது. இந்தப் பலகைகள், நெடுஞ்சாலைப் பயனர்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் அவசரகால உதவி எண்களை வழங்கும்.இந்த கியூ.ஆர். குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம், நெடுஞ்சாலையின் எண், நீளம், […]

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் பதிப்பதற்காக தொழிலதிபர் விஜய் மல்லையா வழங்கிய 30 கிலோ தங்கம் முற்றிலும் மாயமாகிவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அதில் 5 கிலோ கிராம் துவாரபாலகர் சிலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த செந்தில்நாத் என்பவர் தெரிவித்துள்ளார். சபரிமலை ஸ்ரீகோயிலில் தங்கத் தகடுகள் பதிக்க வேண்டும் என்று கடந்த 30 வருடங்களுக்கு முன் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்தது. இதுகுறித்து அறிந்த பெங்களூருவைச் சேர்ந்த பிரபல […]

தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்காக அமைக்கப்பட்ட முதல் கோயில் என்ற வரலாற்று சிறப்பைப் பெற்றது கூத்தனூர் சரஸ்வதி கோயில். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகிலும் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் தான் இந்த பிரசித்தி பெற்ற ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலின் முதன்மை தெய்வமாக, வெள்ளைத் தாமரையில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில், வெண்ணிற ஆடை அணிந்து தேவி அருள்பாலிக்கிறார். அன்னையின் வலது கீழ்க் கையில் […]

உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான […]

சென்னை – மதுரை இடையே தினமும் நடைபெறும் விமானப் போக்குவரத்து சேவையில், நேற்று மதியம் ஏற்பட்ட ஓர் எதிர்பாராத நிகழ்வு, பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. சென்னையில் இருந்து சரியாக பகல் 12.40 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். விமானம் மதுரை விமான நிலையத்தை நெருங்கி, பகல் 1.45 மணியளவில் தரையிறங்க ஆயத்தமானது. ஓடுபாதையில் […]

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமாரை கைது செய்ய 5 தனிப்படை விரைவு. கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக இருந்து வரும் இருவரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு […]

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. விமான நிலைய மேலாளர் அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலில், விமான நிலையத்தின் குப்பைத் தொட்டிகளில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை வெடித்துச் சிதறும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, உடனடியாக சுதாரித்துக்கொண்ட விமான நிலைய அதிகாரிகள், இயக்குநருக்கு தகவல் அளிக்க, நள்ளிரவில் விமான நிலைய அவசரகால பாதுகாப்பு குழுவின் கூட்டம் நடந்தது. பின்னர் உயர் அதிகாரிகள், பிசிஏஎஸ், […]

ஹமாஸ் பயங்கரவாதக் குழு “இராணுவ ரீதியாக சிக்கியுள்ளது”, பிராந்திய மற்றும் உலகளாவிய சக்திகளின் ஆதரவுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட அதற்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில் டிரம்ப் கூறியதாவது, “ஹமாஸ் பல ஆண்டுகளாக மத்திய கிழக்கில் ஒரு மிருகத்தனமான மற்றும் வன்முறை அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அவர்கள் மக்களைக் கொன்றுள்ளனர், இது அக்டோபர் 7 ஆம் தேதி […]

மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும், “சென் பார்மா” மருந்து நிறுவனத்தின் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்; மத்தியப் பிரதேச அரசிடம் இருந்து கடந்த 1-ம் தேதி கடிதம் வந்தது. மக்களின் உயிர்காக்கும் பிரச்சினை என்பதால் உடனடியாக, காஞ்சிபுரத்தில் செயல்படும் ‘சென் பார்மா’ நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பேட்ச் 13-ல், தயாரிக்கப்பட்ட, கோல்ட்ரிப் […]