மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப் உட்கொண்ட 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுப்பதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. மேலும், சிரப்பை எவ்வாறு வழங்குவது என்பது குறித்த வழிமுறைகளையும் இது வழங்குகிறது. 2 வயதுக்குட்பட்ட குழந்தையாக இருந்தால், பெற்றோர்கள் அவர்களுக்கு இருமல் மற்றும் சளி மருந்து கொடுக்கவே […]

தாயுமானவர் திட்டத்தில் 2 நாள் ரேஷன் பொருள் விநியோகம் செய்யப்பட்ட உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் (12.8.2025) தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று […]

பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்ததாகவும், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் குறைவாகவும் உள்ள ஒரு உணவுமுறை, ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 15 மில்லியன் இறப்புகளைத் தடுக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. “பிளானட்டரி ஹெல்த் டயட் (Planetary Health Diet)” எனப்படும் உணவு முறை , அதாவது மனித உடலுக்கும் பூமியின் சூழலுக்கும் ஆரோக்கியமானதாக வடிவமைக்கப்பட்ட உணவு முறை, உலகம் முழுவதும் பரவலாக பின்பற்றப்பட்டால், ஆண்டுதோறும் சுமார் […]

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு […]

கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அரூரில் பேசிய அவர்; முதல்வர் ஸ்டாலின் 2026 தேர்தலில் திமுக கூட்டணி 200 இடம் வெல்லும் என்று கனவு காண்கிறார். இந்த […]

ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில், டெல்லி மற்றும் வட இந்தியாவின் வேறு சில மாநிலங்களில் வானம் மூடுபனி மற்றும் புகைமூட்டத்தால் சூழப்பட்டுள்ளது. இது நுரையீரலை சேதப்படுத்தும் என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் மாசுபாடு உண்மையில் உங்கள் இதயத்திற்கு ஏதேனும் பிரச்சனைகளை ஏற்படுத்துமா அல்லது அது இதய நோய்க்கு வழிவகுக்குமா என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியாவிட்டால், மாசுபாட்டிற்கும் இதய நோய்க்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை ஆராய்ச்சி மற்றும் நிபுணர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். […]

தமிழகத்தில் சென்னை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, […]

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் செவிலியராக இருக்கும் ஒரு பெண், கோடை விடுமுறையில் தனது தந்தையைப் பார்க்கச் சென்றிருந்த தனது 15 வயது வளர்ப்பு மகனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த சம்பவம் நடந்தது.. இதுதொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.. 35 வயதான அலெக்சிஸ் வான் யேட்ஸ் இந்த ஆண்டு செப்டம்பரில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் மீது ஆபாச மற்றும் […]

‘சைபர் விழிப்புணர்வு மாத அக்டோபர் 2025’ தொடக்க விழா அக்டோபர் 3 வெள்ளிக்கிழமை காவல்துறை இயக்குநர் (டிஜி) அலுவலகத்தில் நடைபெற்றது. அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் அக்‌ஷய் குமார் தனது டீனேஜ் மகள் நிதாரா சம்பந்தப்பட்ட ஒரு […]