டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய உலகில், மனிதர்களின் அன்றாட தேவைகளாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களின் விலை 2026-ஆம் ஆண்டில் அதிரடியாக உயரக்கூடும் என்ற தகவல் தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து டிக்கெட் முன்பதிவு முதல் ரேஷன் கடை பொருட்கள் வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட சூழலில், இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் பட்ஜெட்டை நேரடியாக பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. சர்வதேச சந்தை ஆய்வு நிறுவனமான ஐடிசி […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, மாந்திரீகம் செய்வதாக நம்ப வைத்து மருமகளை மாமியார் கழுத்தறுத்து கொலை செய்த கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நந்தினி (29) என்ற பெண், தனது முதல் கணவர் மறைவுக்கு பிறகு மரிய ரொசாரியோ என்ற பிசியோதெரபிஸ்ட்டை காதலித்து 2-வதாக திருமணம் செய்துகொண்டதே இந்த கொலைக்கு காரணமாக மாறியுள்ளது. இந்த திருமணத்தில் விருப்பமில்லாத மாமியார் கிறிஸ்தோப்மேரி (55), தனது குடும்ப கௌரவம் […]
புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக விழாவில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தின் தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். தமிழகத்தின் கடன் சுமை விண்ணைத் தொட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இன்று மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் அட்டை […]
பெங்களூருவில் காதலனை வசியம் செய்ய நினைத்த இளம்பெண் ஒருவர், போலி சாமியாரை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடுகோடி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் அந்த இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை தீவிரமாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை சொல்ல தயங்கிய நிலையில், எப்படியாவது அந்த இளைஞரைத் தனது வசப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. […]
அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம், அந்த மாநில மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திங்கட்கிழமை அதிகாலை சுமார் 4.17 மணி அளவில், மக்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அசாமின் மோரிகான் (Morigaon) மாவட்டத்தை மையப்புள்ளியாகக் கொண்டு உருவான இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. நிலப்பரப்பிற்கு அடியில் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த […]
சிறுநீரக கோளாறு மற்றும் கிரியேட்டினின் (Creatinine) அளவு அதிகரிப்பால் டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வரை சென்று தவிக்கும் நோயாளிகளுக்கு, ஒரு எளிய உணவுமுறை மாற்றம் பெரும் நம்பிக்கையை அளித்து வருகிறது. பொதுவாக ஒரு ஆரோக்கியமான மனிதரின் உடலில் கிரியேட்டினின் அளவு 0.6 முதல் 1.3 வரை இருக்க வேண்டும். இந்த அளவு அதிகரிக்கும் போது சிறுநீரகம் செயலிழப்பதாக கருதப்பட்டு, பல லட்சம் ரூபாய் செலவிலான சிகிச்சைகள் […]
தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த இரண்டு நாட்களாகப் பத்திரப்பதிவுப் பணிகள் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாநிலப் பத்திரப்பதிவுத் துறையின் மைய தரவு சேமிப்பு வன்பொருளில் (Server Hardware) கடந்த ஜனவரி 3-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறுதான் இந்த முடக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஆன்லைன் மூலம் ஆவணங்களை தாக்கல் செய்வது, வில்லங்கச்சான்றிதழ் பெறுவது மற்றும் சொத்துப் பரிமாற்ற பதிவுகள் […]
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் எடுத்து வரும் அதிரடி அரசியல் நகர்வுகள், திராவிடக் கட்சிகளின் கோட்டையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. “கூட்டணியில் இணைபவர்களுக்கு ஆட்சியில் பங்கு” என விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் வீசிய அதிகாரப் பகிர்வு அஸ்திரம், தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் முறையையே புரட்டிப் போட்டுள்ளது. தற்போது தவெக-வை நோக்கி திரும்பியுள்ள முக்கிய கவனிப்பு என்னவென்றால், […]
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ. 5,000 ரொக்கம் வழங்கப்படும் என அக்கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி அதிரடியாக தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற அதிமுகவின் உட்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசின் செயல்பாடுகளை […]
பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல், அதை பாதுகாப்பாகப் பெருக்குவதும் ஒரு பெரிய சவாலாகும். பங்குச் சந்தையில் ஆபத்து அதிகம், தங்கத்தின் விலை எப்படி மாறும் என்று கணிப்பது கடினம், மேலும் வங்கி வட்டி எதிர்பார்த்த அளவில் இல்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில், எந்தவித ஆபத்தும் இல்லாமல் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால், மத்திய அரசால் வழங்கப்படும் கிசான் விகாஸ் பத்ரா (KVP) ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. தற்போதைய விதிகளின்படி, KVP-யில் முதலீடு […]

