வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடக்க இருந்த, எஸ்.ஐ எழுத்து தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், 909 ஆண்கள்; 390 பெண்கள் என, 1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ஏப்ரலில் வெளியிட்டது. இதற்காக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் விண்ணப்பித்தனர். காவல் துறையில், இரண்டு மற்றும் முதல் நிலை காவலர்களாக, தலைமைக் காவலர்களாக பணிபுரிவோரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, […]

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று விண்வெளிக்கு செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆக்சியம் மிஷன் என்பது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோவின் கூட்டு முயற்சியாகும். மோசமான வானிலை காரணமாக, விண்வெளி பயணம் நாளைக்கு (ஜூன் 11) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை பெற்றவர் ராகேஷ் சர்மா. இவர் 1984ஆம் […]

துணை தேர்வில் அரியர் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் டிப்ளமா தேர்வில் இறுதி செமஸ்டர் மற்றும் துணை தேர்வை எழுதிய மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் அரியர் வைத்துள்ளனர். அம்மாணவர்கள் உயர்கல்வி பயிலவும் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் இருக்கும் […]

திருமாலின் 108 திவ்ய தேசங்களில் முக்கிய இடம் வகிக்கும் உலகளந்த பெருமாள் கோவில், தனிச்சிறப்புகளால் பக்தர்களை ஈர்த்துவருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள இந்த தலம் 47வது திவ்ய தேசமாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்குள்ளாகவே நான்கு திவ்ய தேசங்கள் திருக்காரகம், திருப்பாடகம், திருஊரகம் மற்றும் திருநீரகம் ஆகியவை அமைந்துள்ளன என்பது இதன் முக்கிய தனிச்சிறப்பாகும். இது, 108 திவ்ய தேசங்களில் வேறெங்கும் காண முடியாத அமைப்பாகும். இக்கோவிலில் வீற்றிருக்கும் மூலவர் உலகளந்த பெருமாள், […]

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் நேற்று நடைபெற்ற 6ஆவது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கே. ஆஷிக், மோஹித் ஹரிகரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹரிகரன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆஷிக் உடன் கேப்டன் பாபா […]

கூட்டுறவுத் துறையில் பயிர்க்கடனுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்குவது தொடர்பாக கூட்டுறவுத் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு போன்றவற்றுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடன் வழங்குவது தொடர்பாக கூட்டுறவுத்துரை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. அதில், ”சிபில் ஸ்கோர் அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு […]

உச்சநீதிமன்றத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : உச்சநீதிமன்றம் வகை :மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 26 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : * Senior Court Assistant -cum- Senior Programmer * Junior Court Assistant -cum- Junior Programmer […]

ஒரு மாதம் முழுவதும் இரவு உணவை தவிர்த்தால், உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். இதுகுறித்து பெங்களூரு மருத்துவ உணவியல் நிபுணரும் ஊட்டச்சத்து நிபுணருமான டாக்டர் ட்வின்சி அன் சுனில் கூறுகையில், ”இரவு உணவை தவிர்ப்பதால், உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, கலோரிகள் குறைந்து உடல் எடையை இழப்பீர்கள். ரத்த சர்க்கரை செறிவு குறைகிறது. இதன் காரணமாக மயக்கம், எரிச்சல் மற்றும் சோர்வு ஏற்படும். […]

எல்லோரும் சொந்த வீடு வேண்டும் என்று விரும்புகிறார்கள். பணத்தை மிச்சப்படுத்தவும், வீடு வாங்க கடன் வாங்கவும் பல வருடங்கள் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால், புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்த பிறகு பலர் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பழைய வீடு அல்லது வாடகை வீடு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், ஜோதிட நிபுணர்கள், நாம் விரும்பியபடி வீடு கட்டி, பணம் செலவழித்து வீட்டிற்குள் நுழைந்தால் மட்டும் போதாது என்று கூறுகிறார்கள். வீட்டுப் […]

உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளா விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம், நாட்டையே பாதித்தது. ஆனால் அதைவிட வேதனையை அளிப்பது, அந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படாதது என்ற செய்திதான். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம் தேதி […]