புதுச்சேரி மாநிலம் வம்பாகீரப்பாளையம் அருகே பாண்டி மெரினா செல்லும் சாலையில் நேற்று இளைஞர் ஒருவரின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. இதையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒதியஞ்சாலை போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையின் விசாரணையில், கொலையானவர் ரெட்டியார்பாளையம் […]

நியூசிலாந்தில் புகழ்பெற்ற உணவக நிறுவனமான ஹெல் பீட்சா (Hell Pizza) கடந்த 2023 ஆம் ஆண்டு உலகின் கவனத்தை ஈர்த்த ஒரு வினோத திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர்கள் பீட்சாவை உடனடியாக ஆர்டர் செய்து உண்ணலாம், ஆனால் அதற்கான கட்டணத்தை அவர்கள் இறந்த பிறகு செலுத்தினால் போதும் என்ற திட்டமே அது. இந்த திட்டம் “ஆஃப்டர்லைஃப் பே” (After Life Pay) என அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய இந்த திட்டமானது, […]

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மையமாக விளங்கும் ஒருங்கிணைந்த UPI சேவையின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஒரு முக்கிய விதிமுறையை அறிவித்துள்ளது. இந்தப் புதிய விதிகள் நவம்பர் 3ஆம் தேதியான இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. தற்போதுள்ள நடைமுறையில், ஒரு நாளில் 10 செட்டில்மென்ட் சுழற்சிகளில் வெற்றிகரமான மற்றும் தோல்வியடைந்த/ரத்து செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் ஒரே நேரத்தில் கையாளப்பட்டன. மாதந்தோறும் பில்லியன் […]

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் திரைத்துறையினர் மற்றும் அரசியல் பிரபலங்களிடையே தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் ‘திருப்பாச்சி’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த நடிகர் பெஞ்சமின், கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விஜய் தமிழகத்தின் முதல்வராக உருவெடுப்பார் என்பதில் தனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “விஜய் தொட்டதெல்லாம் வெற்றிதான். அவரது வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது. அப்படிப்பட்ட […]

இந்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் ஜல் சக்தி அமைச்சகங்களால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஸ்வச் சர்வேக்ஷன் (Swachh Survekshan) என்ற தூய்மை ஆய்வு அறிக்கை, நகரங்கள் மற்றும் கிராமங்களின் சுகாதார நிலையை அளவிடுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ஆய்வானது நகரங்களுக்கு இடையே தூய்மைக்கான போட்டியை உருவாக்கி, தூய்மையான இந்தியாவை நோக்கிய நகர்வை ஊக்குவிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. சுகாதார வசதிகள், கழிவு மேலாண்மை, பொது இடங்களின் தூய்மை மற்றும் […]

அனைத்துக் கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் நாடகம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் ஸ்டாலின், தற்போது மட்டும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம். பல்லாண்டுகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் […]