2023-ம் ஆண்டில் புதிய வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருந்தால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி உண்டு. ஆம் வாகனங்களின் விலையை அதிகரிக்கப் போகிறது. அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் புதிய விதியின் காரணமாக இந்த விலை உயர்வு இருக்கும். உண்மையில், BS6 உமிழ்வு விதிமுறைகளின் இரண்டாம் கட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டி உள்ளது. இதனால் […]

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (ரெபோ ரேட்) 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ரெபோ ரேட் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்களில் வட்டிவிகிதம் அதிகரித்தது. எஸ்பிஐ வங்கி முதல் பிஎன்பி வங்கி வரை பல வங்கிகள் வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்களை கடந்த அக்டோபர் 1முதல் அதிகரித்து இருக்கிறது. அதன்படி எஸ்பிஐ வங்கியானது […]

ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தப்படுவதாக இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகத்திற்கு வந்த புகாரை அடுத்து, பிஐஎஸ் அதிகாரிகள் குழு ஓசூர் அருகே கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலாஜி கெபாசிட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தி மோட்டார் மின்தேக்கிகள் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுமார் 155 எண்ணிக்கையிலான மாற்று மின்னோட்ட மோட்டார் மின்தேக்கிகள் பறிமுதல் […]

ஓய்வூதியதாரர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க இலவச எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புகார்களை அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாத ஓய்வூதியதாரர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க புதிய நடைமுறையை அரசு கொண்டு வந்துள்ளது. இப்போது நீங்கள் முதன்மை கணக்கு பொது அலுவலகத்தில் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல் அல்லது குறைகளை தொலைபேசி வாயிலாக பதிவு செய்யலாம். அதற்கான சில கட்டணமில்லா எண்கள் மற்றும் குரல் அஞ்சல் சேவைகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன, மேலும் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் […]

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் செய்து குறிப்பில்; இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் பொழுது, அத்துடன் தரமான ஹெல்மெட்டினையும் விற்பனை செய்யும் முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகிப்பது நமது புலன்களின் திறனை 50 சதவீதம் குறைக்கும் என்பதால், எந்த வாகனம் ஓட்டும்பொழுதும் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். […]

இயற்கை எரிவாயு விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.இயற்கை எரிவாயு டெல்லியில் ஒரு கிலோ ரூ. 78.61 ஆகவும், நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத்தில் ஒரு கிலோ ரூ. 81.17 ஆகவும், குருகிராமில் ரூ. 86.94 ஆகவும் கிடைக்கும். அக்டோபர் 3 ஆம் தேதி, இயற்கை எரிவாயு விலைகள் 8 முதல் 12 […]

பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 ஆர்டர் செய்த ஒரு நபருக்கு ஐபோன் 14 டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கிக் வருகின்றனர். அந்த வகையில், கடந்த காலங்களில் விலை உயர்ந்த செல்போன், லேப்டாப் ஆர்டர் செய்த சிலருக்கு அதற்கு பதிலாக சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். இந்நிலையில், Flipkart […]

இந்தியாவிற்குள் வரும் போக்குவரத்து அல்லாத மோட்டார் வாகனங்களுக்கான இந்திய விதிமுறைகள் 2022-ஐ மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் 02.09.2022 அன்று அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட தனிநபர் வாகனங்கள் இந்தியாவிற்குள் நுழையும் போது இந்த விதிமுறைகள் பொருந்தும். இந்த விதிமுறைகளின்படி, நாட்டில் தங்கியிருக்கும் போது செல்லுபடியாக கூடிய பதிவுச் சான்றிதழ், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் அல்லது சர்வதேச ஓட்டுநர் உரிமம், காப்பீட்டு வாகனம், மாசுக்கட்டுப்பாட்டு […]

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆகியவற்றை 28 சதவீதமாக உயர்த்த இருந்து வருகிறது. சமிபத்தில் ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி மற்றும் DA நிலுவைத் தொகை கிடைத்துள்ளது. தற்போது மத்திய அரசின் மற்ற ஊழியர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 28 அன்று, மத்திய அரசு தசரா போனஸ் அறிவித்தது மற்றும் ஜூலை 1, […]

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் ஏதும் இல்லை என்று சமீபத்திய இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் தனது சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபே கிரெடிட் கார்டு கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது, மேலும் அனைத்து முக்கிய வங்கிகளும் செயல்படுத்தப்பட்டு வணிக மற்றும் சில்லறை விற்பனை பிரிவுகளுக்கு அட்டைகளை வழங்குகின்றன. சாதன பைண்டிங் மற்றும் UPI PIN அமைப்பு செயல்முறையானது, […]