தமிழ்நாடு முழுவதும் நேற்று (நவம்பர் 16) நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் நடந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே, அக்கட்சியில் இருந்து விலகும் நிகழ்வுகள் அரங்கேறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காலையில் தமிழ்நாடு முழுவதும் தவெக நடத்திய போராட்டங்கள் நடந்து முடிந்த நிலையில், மாலையில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக […]

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி, உம்பிலிக்கம்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சாமிநாதன் என்பவரது மனைவி ராணி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நல்லதம்பி என்பவருக்கும் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராணி கடந்த 2000-ஆம் ஆண்டு நல்லதம்பியுடன் இருந்த தொடர்பைத் துண்டித்துக்கொண்டு விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நல்லதம்பி, ராணியுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை கட்டையால் […]

ஆன்லைன் வங்கி மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி வங்கிகளும் தங்களுடைய அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை (.com அல்லது .co.in) மாற்றி, இனி .bank.in என்ற புதிய டொமைன் பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று […]

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் அமைச்சரும், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முக்கியப் பங்கு வகிப்பவருமான ஆர். காந்தி, நேற்று திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனை குறித்த முழு விவரம் உடனடியாக தெரியாத நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். திடீர் உடல்நலக் குறைவால் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி, அவரது […]

சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பு நவம்பர் 30 வரை நீட்டிப்பு செய்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது, விவசாயிகள் சம்பா நெற்பயிரை முழு வீச்சில் சாகுபடி செய்து வருகின்றனர். இதுவரை 26.25 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நாள் வரை, 6.27 லட்சம் விவசாயிகளால் 15 இலட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த […]

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு […]

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக் கூடும். இதன் காரணமாக இன்று தமிழக கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, […]

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக் […]

மதுரையில் ஓய்வு பெற்ற ஆவின் ஊழியர் தர்மராஜ் என்பவரது 5-வது மகள் திவ்யா, எம்.எஸ்சி. பட்டப்படிப்பை முடித்தவர். மலேசியாவில் உயர்கல்வித் தொடரப் போவதாக தனது குடும்பத்தினரிடம் கூறி, அதற்கான அனைத்து ஆவணங்களையும் காட்டியதால், குடும்பத்தினருக்கோ அல்லது அக்கம் பக்கத்தினருக்கோ எந்த சந்தேகமும் வரவில்லை. படிப்புக்காக தேவையான 5 லட்சம் ரூபாய் உள்ளிட்ட செலவுகளையும் பெற்ற திவ்யா, கடந்த 3 வருடங்களாக மலேசியாவில் இருப்பதாகவே அவரது குடும்பத்தினர் உறுதியாக நம்பியிருந்தனர். இந்நிலையில், […]