வீட்டு மின் இணைப்புகளின் பெயரை மாற்றுவதில் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வந்த தேவையற்ற காலதாமத புகார்களை கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு, தற்போது சில முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. இதன் மூலம் நுகர்வோர் எளிதாகவும் விரைவாகவும் பெயர் மாற்றத்தை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வணிகப் பிரிவு சார்பில் புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, தாழ்வழுத்தப் பிரிவு வீட்டு மின் […]

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு சமூக வலைத்தளம் மூலம் லிபின் ராஜ் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார். இந்த அறிமுகம் விரைவில் காதலாக மாறியது. காதலில் இருந்தபோது, லிபின் ராஜ் அந்தப் பெண்ணிடம் ஆடை இல்லாமல் வீடியோ காலில் பேச சொல்லியுள்ளார். காதல் மயக்கத்தில் அந்தப் பெண்ணும் அவர் சொன்னதை கேட்டு நிர்வாணமாக பேசியுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் லிபின் ராஜ் அவரது நிர்வாணப் […]

ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தான் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் இணைய இருப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். சமீபகாலமாக, ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான பெங்களூர் புகழேந்தி, மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட சிலர் தி.மு.க.வில் இணைந்த நிலையில், வைத்திலிங்கமும் அதிமுக அல்லது தி.மு.க.வில் இணையப் போவதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவி வந்தன. […]

தமிழகத்தில் 16ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும், நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 16 முதல் 18-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், […]

திருமணத்திற்கு முன் சம்மதத்துடன் உடலுறவு கொண்டு, பின்னர் அந்த உறவு முறிந்தால், அதை ‘திருமணம் செய்வதாக ஏமாற்றுதல்’ என்று கூறி கிரிமினல் வழக்கு தொடர முடியாது என்று உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை வழங்கியுள்ளது. தனிப்பட்ட உறவுகளில் ஏற்படும் உணர்ச்சிப்பூர்வமான ஏமாற்றத்தை குற்றவியல் நடவடிக்கையாக மாற்றுவது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்குச் சமம் என்றும் நீதிபதி புகழேந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வழக்கின் பின்னணி என்ன..? திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பட்டதாரிப் பெண், தன்னைத் […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.. இந்த சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.. இந்த […]