கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் வீட்டில் நள்ளிரவில் நடந்த பரபரப்பான சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மீன்பிடிக்கச் சென்ற சமயத்தில் மனைவி வேறொரு நபருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் தெரியவந்ததில் இருந்து கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த முன்தினம் இரவும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை […]

பாலிவுட் பழம்பெரும் தர்மேந்திரா, பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார். தற்போது அவர் வீட்டிலேயே சிகிச்சை பெறுவார் என்று பிரீச் கேண்டி மருத்துவமனையின் மருத்துவர் உறுதிப்படுத்தி உள்ளார்.. 89 வயதான நடிகர் தர்மேந்திரா மருத்துவ பரிசோதனைக்காக பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 10 அன்று அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார். இன்று (நவம்பர் 12) […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றதாக கூறப்படும் மற்றொரு 15 வயது சிறுவன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுமி, கடந்த ஓராண்டு காலமாகத் தேனி பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற […]

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உடன் இருக்கும் “தீய சக்திகள், துரோகிகள், கைக்கூலிகள்” விலகும் வரை அவருடன் சேர மாட்டேன் என்று கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்திருக்கும் குற்றச்சாட்டுக்கு, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி நேரடி சவால் விடுத்துள்ளார். அந்தக் ‘தீய சக்திகளின்’ பட்டியலை அன்புமணி கொடுத்தால், அதில் நானாக இருந்தாலும் கட்சியில் இருந்து விலக தயாராக இருக்கிறேன் என்று ஜி.கே. மணி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சேலத்தில் […]

தமிழகத்தில் திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 13 முதல் 15-ம் தேதி வரை […]

2026-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களும் 2026-ம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் மூடப்பட வேண்டும். இதுதவிர, தமிழகத்தில் பொது விடுமுறை நாட்களின் விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் ஆண்டில் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், தைப்பூசம், ரம்ஜான், புனித வெள்ளி, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கியப் பண்டிகைகள் உட்பட மொத்தம் 24 நாட்களுக்கு […]