தமிழ்நாட்டின் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் 41 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.. வழக்குப் பதிவு செய்ய சொன்னது அரசு தான்.. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கு […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்குவதில் மக்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பொதுவாக, தரமான மற்றும் மலிவு விலை வெடிகளை வாங்க வேண்டும் என்ற விருப்பத்துடன் பலர் சிவகாசியை நோக்கிப் படையெடுப்பது வழக்கம். ஆனால், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அந்த சிரமத்தைத் தவிர்க்கும் வகையில், அரசு கூட்டுறவு பண்டகச் சாலையிலேயே சிவகாசியில் தயாரிக்கப்படும் தரமான பட்டாசுகள் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது, […]

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீண்டும் […]

சென்னை திருவான்மியூரில் கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய வழக்கறிஞர் கௌதம் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர் ஒருவர், அடையாறில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் திமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவருமான குணசேகரன் ஆவார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் […]

இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தீவிரமாக செயல்படும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), இப்போது தூய்மைப் பணியிலும் ஒரு புரட்சிகரமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் காணப்படும் பொதுக் கழிவறைகளின் சுகாதாரத் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். வாகன ஓட்டிகள், பயணிகளை நேரடியாக இந்தப் பணியில் ஈடுபடுத்தும் ஒரு புதுமையான திட்டத்தை NHAI அறிவித்துள்ளது. அதாவது, சுகாதாரமற்ற கழிவறைகள் குறித்துப் புகார் அளிக்கும் […]

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்த டிரைவர் காளிமுத்து (27) மற்றும் அவரது மனைவி சினேகா (24) ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக திருமண வாழ்வில் உள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். குழந்தைகளின் கல்விக்காக இவர்கள் தற்போது காளப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள 3-வது மைல் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், காளப்பநாயக்கன்பட்டி அருகே புளியங்காடு பகுதியில் வசித்து வந்த […]