போக்குவரத்து கழகங்​களில் ஊக்கத்தொகை​யுடன் வழங்​கப்​படும் தொழிற்பயிற்​சி​யில் பங்​கேற்க அக்​.18-ம் தேதிக்குள் விண்​ணப்​பிக்​கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, எம்டிசி, எஸ்இடிசி ஆகிய மண்டலங்களில் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 458 காலியிடங்களும், பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு 561 காலியிடங்களும், கலை, அறிவியலில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 569 காலியிடங்களும் உள்ளன. […]

தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ‘தீப ஒளித் திருநாள்’ எனப் போற்றப்படும் இந்தப் பண்டிகை, தமிழ்நாட்டில் தனிச் சிறப்புகளுடன், அலாதியான மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே, வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்களின் மனக்கண் முன் நிற்பது சொந்த ஊரும், அங்கே காத்திருக்கும் குடும்பமும்தான். வருடத்தின் இந்த ஒரு நாளுக்காகவே, பெரு நகரங்களில் பணிபுரியும் பல ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊரை நோக்கி படையெடுப்பார்கள். தீபாவளி பண்டிகை என்பது, நரகாசுரனை […]

தமிழகத்தில் இன்று முதல் 19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ”தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் […]

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோவில், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெரும் சிறப்புகளால் தனித்து நிற்கிறது. சைவத் திருமுறைகளில் போற்றப்படும் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 200-வது தலமாகவும், பாண்டிய நாட்டுத் தலங்களில் 10-வது இடத்தையும் இது வகிக்கிறது. சங்க காலத்தில் ‘திருக்கானப்பேர்’ என்று புறநானூற்றில் குறிப்பிடப்பட்ட இந்தப் பழம்பெரும் ஊர், சுந்தரமூர்த்தி நாயனாருக்குச் சிவபெருமானின் காளை வாகனம் வழி காட்டியதால் ‘காளையார்கோவில்’ எனப் பெயர் […]

அரசுப் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாமல் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு அடுத்தாண்டு 3 முறை சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்: பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர்கள் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிகளவிலான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய சூழலில் உள்ளனர். பதவி […]

இருமல் மருந்தால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மருந்து ஏற்றுமதி செய்ததில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகளின் வீடுகள்,மருந்து ஆலைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மத்திய பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். விசாரணையில், இருமல் மருந்தில் டைஎதிலீன் கிளைகோல் நச்சு அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, […]

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 2.04 மணி அளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஏடிஆர் சிறிய ரக பயணிகள் விமானம் 62 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் என மொத்தம் 67 பேருடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டது. இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையை நோக்கி நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் சிறிதளவு லேசான விரிசல் ஒன்று விழுந்துள்ளது. இதை பார்த்த […]

கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.. இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் இது குறித்து பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.. அப்போது “ கரூரில் நடந்ததை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார்.. நாம் பார்த்த மாதிரி அவரும் பார்த்ததால் கருத்து சொல்கிறார்.. தவெகவினர் ஓடிவிட்டனர் என்று செந்தில்குமார் சொன்னது உண்மை தானே.. […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]