கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் பெற அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், மாற்றுத்திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அறிவுசார் திறன் குறைபாடு உள்ளவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக […]

தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு வட்டம் சார்பில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு வட்டம் சார்பில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் 2025 செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான முறையான அறிவிக்கை, அதிகாரப்பூர்வ இணையதளமான www.cgca.gov.in/ccatn என்ற தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த குறைதீர்ப்பு இன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை காணொலிக்காட்சி முறையில் நடைபெறவுள்ளது. […]

திமுக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை, 1.15 கோடிப் பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதால், இது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், அரசின் மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் வெற்றி காரணமாக, விடுபட்ட பெண்களும் உரிமைத் தொகை பெற ஆர்வம் காட்டினர். அவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து, திட்டத்தை விரிவாக்க அரசு முடிவு செய்தது. இதன் ஒரு […]

குரூப் 1- 2025 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு முதன்மைத் தேர்விற்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னனி தேர்வு பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 2025 முதல்நிலை தேர்வில் (Preliminary […]

தருமபுரி மாவட்டத்தில் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவம், வேளாண்மை, கால்நடை, பாரா மெடிக்கல் மற்றும் இதர தொழிற் சார்ந்த பட்ட படிப்பு மற்றும் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ […]

தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் […]

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து, ஆண் குழந்தை பிறந்த பிறகு தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, கயலூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 30), கடந்த 2015 முதல் 2020 வரை சென்னையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைபார்த்து வந்துள்ளார். அதே கடையில் 26 வயது இளம்பெண்ணும் வேலை பார்த்துள்ளார்.அப்போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பின்னர், திருமண […]

கள்ளக்குறிச்சி அருகே தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைகோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி, தனது மனைவி லட்சுமி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு லட்சுமி வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் சந்தித்துக் கொண்டதை கொளஞ்சி நேரடியாகப் பார்த்துள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை […]