மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தெற்குராஜன் வாய்க்காலில் கடந்த 20ஆம் தேதி அதிகாலை இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த இளைஞரின் உடல், வாய்க்காலில் அடித்துச் செல்லாமல் இருக்க ஒரு பெரிய கல்லுடன் கட்டப்பட்டிருந்தது. உடலின் பல இடங்களில் வெட்டுக் காயங்களும் இருந்தன. பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்தவர் சீர்காழி அருகே மேல் குத்தவக்கரையைச் சேர்ந்த லட்சுமணன் (35) […]

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.. தனது சுற்றுப்பயணத்தின் பேசிய அவர் “ காங்கிரஸ் கட்சி நூற்றாண்டு கண்ட கட்சி.. அப்படிப்பட்ட கட்சி திமுகவிற்கு அடிமையாக உள்ளது.. இப்படி அடிமைத்தனமாக இருப்பது காங்கிரஸ் தான்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பல கட்சிகளில் இருந்து வந்தவர்.. பிச்சைக்காரர்களின் ஒட்டுப்போட்ட சட்டை மாதிரி, இவர் பல கட்சிக்கு போயிட்டு வந்தவர்.. […]

சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு மாலில் வேலை செய்யும் நிரூபன் என்ற இளைஞக்கும், இளம்பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதனால், நண்பர்களுடன் வெளியூர் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, அந்தப் பெண் நிரூபனுடன் பைக்கில் புதுச்சேரிக்கு கிளம்பினார். பயணத்தின்போது நிரூபன் மது போதையில் இருந்ததை அவர் கவனிக்கவில்லை. ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை […]

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை வடபழனியில் வாடகை வீட்டில் தங்கி அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி பதுமேகலா அவருடன் உடன் இருந்து கவனித்து வருகிறார். இந்நிலையில், அவர்களின் 6 வயது மகள் சஞ்சனா ஸ்ரீ, ஈரோட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர் […]