தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கார்டு தொடர்பான புகார்களை தீர்க்க, மாதந்தோறும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் குறைதீர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இம்மாதத்திற்கான முகாம், செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள 14 மண்டலங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜம்மணபுதூர், ஆத்தூர் குப்பம், திருவாபாளையம் மற்றும் விண்ணமங்கலம் ஆகிய நியாயவிலைக் கடைகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை […]

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சொக்குபிள்ளைபட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயது மாரியப்பன், தனது மனைவி பழனியம்மாளுடன் வாழ்ந்து வந்தார். இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், பழனியம்மாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாரியப்பனுக்கு தெரிந்த நிலையில், பழனியம்மாளுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். மேலும், மாரியப்பன் குடும்பம் சமீபத்தில் சிலுக்குவார்பட்டி பகுதியில் குடியேறினர். இந்நிலையில், கடந்த சில […]

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே துள்ளுக்குட்டிநாயக்கணூர் கிராமத்தில், குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், பெற்ற மகனைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துள்ளுக்குட்டிநாயக்கணூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் பாண்டி. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் வழக்கம் போல் இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது, இருவருக்கிடையே மீண்டும் […]

செப்டம்பர் 22ஆம் தேதி முதல், பேக்கேஜ் செய்யப்பட்ட UHT பால் மீதான ஜிஎஸ்டி வரி 5%இல் இருந்து 0% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அமுல், மதர் டெய்ரி போன்ற முன்னணி பால் நிறுவனங்களின் UHT பால் விலைகள் குறைய வாய்ப்புள்ளது. அமுல் கோல்டு பாலின் விலை லிட்டருக்கு ரூ.69-இல் இருந்து ரூ.65 ஆகவும், மதர் டெய்ரி டோன்ட் பாலின் விலை ரூ.57-லிருந்து ரூ.54 ஆகவும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த […]