சினிமாவில் இருந்து அரசியலில் குதித்துள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளார். இவர், சமீபத்தில் மதுரையில் நடத்திய மாநாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தேர்தலும் நெருங்கி வருவதால், மக்களை நேரடியாக சந்திக்க விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது மேடைகளில் பிரதமர் மோடி, முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோரை நேரடியாகவே தாக்கிப் […]

தொழில்நகரான திருப்பூரில், தொழிலாளர்களின் அணிவகுப்பால் இரவும் கூட பகலாக மாறிவிடுகிறது. ஏராளமான பின்னலாடை மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலைகளில் உள்ளூர் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலைக்காக திரண்டு வருகின்றனர். இந்நிலையில், நகரத்தின் முக்கிய மையமான திருப்பூர் பேருந்து நிலையத்தில், இரவு நேரங்களில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்து வருகிறது. பேருந்து நிலையம் அருகே இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் இளைஞர்களிடம், இளம் பெண்களின் செய்யும் செயல் அங்கு […]

வரும் செப். 1-ம் தேதி முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மத்திய அரசு 2025-26-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை தற்போது நிர்ணயித்து உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள சன்னரக நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,389 என்பதை ரூ.2,545-ஆகவும், பொதுரக நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,369 என்பதை ரூ.2,500-ஆகவும் உயர்த்தி முதல்வர் […]

சென்னையில் இந்த ஆண்டின் முதல் மேகவெடிப்பு (Cloudburst) சம்பவம் பதிவாகியுள்ளது. ஒரு மணி நேரத்தில் 100 மிமீட்டருக்கும் மேல் மழை கொட்டியதால், பல பகுதிகளில் சாலைகள் சில நிமிடங்களில் வெள்ளம் சூழ்ந்தன. இதுகுறித்து வானிலை ஆர்வலரும், ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என அழைக்கப்படும் பிரதீப் ஜான், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, “வடக்கு மற்றும் வடமேற்கு சென்னையில் ஏற்கனவே கனமழை தாக்கியுள்ள நிலையில், அடுத்ததாக தென்சென்னையும் அதேபோல பலத்த மழையை […]

வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் வரும் நாட்களில் ஏலம் முறையில் பேன்சி எண்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான ஃபேன்சி நம்பர் வாங்குவது ஏல முறைக்கு மாற்றப்பட உள்ளது. போக்குவரத்து துறை இந்த புதிய முறையை கொண்டு வந்துள்ளது. அதிக தேவை உள்ள நம்பர்களுக்கு e-bidding முறையில் ஏலம் விடப்படும். இதன் மூலம் அரசுக்கு […]

ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் (ஐடிஐ), 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) நேரடி மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசம் ஜூலை 31 வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கான […]

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,545 மற்றும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,500 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். இதில், தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையாக சன்னரகத்திற்கு ரூ.156 மற்றும் பொதுரகத்திற்கு ரூ.131 வழங்கப்படும். திமுக […]